Header Ads



"இந்தளவு தூரம் வருவேன் என, நான் எதிர்பார்க்கவில்லை" - ரணில்

அரசியல் வாழ்க்கையில் இந்தளவும் தூரம் முன்னேறி வர முடியும் என எதிர்பார்க்கவில்லை எனவும், தனக்கு கிடைத்த பதவிகள் தான் விசேடமாக எதிர்பார்த்தவை அல்ல என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி 40 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு கொல்லன்னாவ புராண ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

பதவிகள் நான் எதிர்பார்த்தவை அல்ல. அரசியல் வாழ்க்கையில் இந்தளவு தூரம் வருவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. 40 ஆண்டுகள் அரசியலில் தொடர்வது சிரமமானது.

அரசியல் வாழ்க்கையில் வெற்றி தோல்வி என அனைத்தும் உள்ளது. எனினும் சரியான புரிதல் மற்றும் ஆராய்தல் மூலம் முன்னோக்கி செல்ல முடிந்தது. பௌத்த தர்மத்தின் அடிப்படையிலேயே இதனை செய்ய முடிந்தது.

புத்த பகவானின் போதனைகளும் தர்மங்களும் அரசியல் வாழ்க்கையில் இந்தளவு தூரம் வரை வருவதற்கு உதவியது. அதனை புண்ணியமாகவும் அதிஷ்டமாகவும் நான் கருதுகிறேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.