Header Ads



"ஜனாதிபதி மாளிகை, சுற்றி வளைக்கப்படுமென எச்சரிக்கை"

ஜனாதிபதி மாளிகையை சுற்றி வளைக்கப் போவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நட்டஈட்டு நிலுவைத்தொகை எதிர்வரும் 26ம் திகதிக்கு முன்னதாக வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லையெனில் ஜனாதிபதி மாளிகையையும், விவசாய அமைச்சினையும் சுற்றி வளைக்கப் போவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

ஹிங்குராக்கொட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏப்ரல் மாத நட்டஈட்டுத் தொகையான 10000 ரூபா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்று மாத காலத்திற்கான நட்டஈட்டு நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டியுள்ளது. எனினும் நட்டஈட்டு நிலுவைத் தொகை இதுவரையில் செலுத்தப்படவில்லை.

எங்களை கொழும்பிற்கு வர வைக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம் என நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.