Header Ads



மாத்தளையில் இப்படியும் ஒரு நிறுவனம்

கர்ப்பிணியொருவர் பிணையாளராகக் கைசாத்திட்டால், அவருக்கு 30 சதவீத வட்டியுடன் உடனடியாக கடன் வழங்கும் நிறுவனம் ஒன்று காணப்படுவதாக, மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர் டி.டி. ஜயதிஸ்ஸ இதைத் தெரிவித்தார்.

கடன் வழங்கும் நிறுவனம், மாதாந்தம் தவணைப்பணத்தைப் பெறும் வரை கர்ப்பிணியின் வீட்டில் காவல் இருப்பதாகவும் இல்லாவிடின் கணவன் தொழில் புரியும் இடத்துக்குச் சென்று கடன் தொகையைப் பெறுவதாகவும் அறிய முடிகிறது.

இந்தக் கடனால் குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றது. எனவே இவ்விடயம் தொடர்பில், மாவட்ட அபிவிருத்திக் குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.