Header Ads



மஹிந்தவிற்கு வேட்புமனு வழங்கப்படாது என கூறிய கருத்து சிறுபிள்ளைத்தனமானது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க சிறுபிள்ளைத்தனமாக பேசுகின்றார் என கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு தேர்தலில் போட்டியிட வேட்பு மனு வழங்கப்படாது என துமிந்த திஸாநாயக்க கூறிய கருத்து சிறுபிள்ளைத்தனமானது.

பொதுச் செயலளார் என்ற ரீதியில் அவர் இவ்வாறு கூறியிருக்கக் கூடாது. எனினும் அவருக்கு குழந்தை வயது என்பதனால் இவ்வாறு கருத்து வெளியிடுகின்றார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் பற்றிய எந்த விடயத்தையும் அறிந்திராத பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுதந்திரக் கட்சியின் கீழ் போட்டியிடக் கூடாது எனக் கூறிய கருத்து நிராகரிக்கப்பட வேண்டியது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.