Header Ads



ஜெய்­லானி பள்­ளி­வாசல், பௌத்த புனி­த­பூ­மியில் அமைந்­துள்ளது - பொது ­ப­ல­சே­னா

-ARA.Fareel-

ஜெய்­லானி  பள்­ளி­வாசல்  அமைந்­துள்ள  கூர­கல பிர­தேசம்  பௌத்த  புனி­த­பூ­மி­யாகும். பௌத்த தொல்­பொருள்  பிர­தே­ச­மாகும். இங்கு நேரில்  சென்று எல்லை வகுப்­ப­தற்கு  அமைச்சர்  அகில விராஜ் காரி­ய­வசம்  முயற்­சிப்­பது வேடிக்­கை­யா­ன­தாகும் என  பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி  டிலன்த விதா­னகே தெரி­வித்தார். 

கல்வி அமைச்சர்  அகில விராஜ்  காரி­ய­வசம்  கூர­க­ல­வுக்கு  நேரடி விஜ­ய­மொன்­றினை  மேற்­கொள்ள திட்­ட­மிட்­டி­ருப்­பது தொடர்பில்  கருத்து  தெரி­விக்­கை­யிலே அவர்  இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து  தெரி­விக்­கையில், 

கூர­கல யாருக்குச் சொந்­த­மா­னது, அதன் எல்­லைகள்  என்ன? என்­பது பற்றி ஆராய அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் நேரடி விஜயம்  மேற்­கொள்ள வேண்­டி­ய­தில்லை. 

 ரணில்  விக்­கி­ர­ம­சிங்க  பிர­த­ம­ராக இருந்த காலத்தில்  ஜனா­தி­ப­தியால்  நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த பௌத்த  ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யொன்று 2002 இல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

 அந்த அறிக்­கையை  முழு­மை­யாக வாசிக்­கு­மாறு  அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­சத்தைக் கோரு­கிறோம். அந்த அறிக்­கை­யிலே உண்மை கூறப்­பட்­டுள்­ளது. இதை­வி­டுத்து  நேரடி  விஜ­யங்­களை மேற்­கொண்டு காலத்தை வீண­டிக்­காது கூர­கல தொல்­பொருள்  பிர­தே­சத்தை  அழி­வு­க­ளி­லி­ருந்தும் பாது­காக்­கு­மாறு  பொது­பல சேனா அமைப்பு  கூறிக்­கொள்ள விரும்­பு­கி­றது. 

அமைச்சர் வெறு­மனே  ஊட­கங்­க­ளுக்கு  கருத்­துகள் வெளி­யிட்டு வரு­கி­றாரே தவிர  நட­வ­டிக்­கை­களில் இறங்கவில்லை.  தொல்பொருட்களைப்  பாதுகாப்பதற்கு  அவர் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் பற்றி  அறிந்து கொள்ள விரும்புகிறோம் என்றார்.

No comments

Powered by Blogger.