Header Ads



வசமாக மாட்டினார் ஞானசாரா, கடும் தண்டனைக்கு வாய்ப்பு..!

ஞான­சார தேரர். இவரை தெரி­யாத யாரும் இன்று இலங்­கையில் இருக்க முடி­யாது. பெளத்த தேர­ரான இவரை இன, மத, மொழி பேத­மின்றி அனை­வரும் அறிந்து வைத்­தி­ருக்க, அவ­ரது அகிம்சை வழி­முறை ஒன்றும் கார­ண­மல்ல. மாற்­ற­மாக தொனியை உயர்த்தி, அதி­கார தோர­ணையில், பிறர் ஒரு­போதும் விரும்­பாத பாணியில், விரும்­பத்­த­காத வச­னங்­களை லாவ­க­மாக கையா­ளு­வ­தா­லேயே அவரை அனை­வரும் அறிந்து வைத்­துள்­ளனர்.

இத்­த­கைய ஆவேச குணம் கொண்ட கல­கொட அத்தே ஞான­சார தேரர், அந்த பண்­பி­னா­லேயே தற்­போது சட்­டத்தின் பிடிக்குள் சிக்கிக் கொண்­டுள்ளார்.

ஆம், 2016 ஜன­வரி மாதம் 26 ஆம் திகதி ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் ஞான­சார தேரர், தனது வழ­மை­யான விளை­யாட்டைக் காட்டச் சென்று, பொறிக்குள் மாட்­டிய எலியாய் தற்­போது சட்­டத்­துடன் போராடிக் கொண்­டி­ருக்­கின்றார்.

இது தொடர்­பி­லான வழக்கின் சாட்சி விசா­ர­ணைகள் கடந்த 18 ஆம் திகதி முதல் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி எல்.டி.பி. தெஹி­தெ­னிய, ப்ரீத்தி பத்மன் சூர­சேன ஆகியோர் அடங்­கிய இருவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கின்­றது.

அதன்­படி கடந்த 18 ஆம், 19 ஆம் திக­தி­களில் வழக்கு விசா­ர­ணைகள் இடம்­பெற்ற நிலையில் ஒரு சாட்­சி­யாளர் மட்டும் முழு­மை­யாக சாட்­சி­யங்­களை வழங்­கி­யுள்­ள­துடன் குறுக்குக் கேள்­வி­க­ளுக்கும் உட்­ப­டுத்­தப்­பட்டார். அவர் வேறு யாரும் அல்ல ஞான­சார தேரர், ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இவ்­வாறு அநா­க­ரி­க­மாக நடந்­து­கொண்­ட­போது ஹோமா­கம நீதி­வா­னாகக் கட­மை­யாற்­றிய தற்­போ­தைய கொழும்பு மேல­திக நீதிவான் ரங்க திஸா­நா­யக்­கவே அவர். தற்­போது குறித்த சம்­பவம் இடம்­பெறும் போது ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இருந்த பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ் சாட்சி வழக்கை ஆரம்­பித்­தி­ருக்­கின்றார். இந் நிலையில் இது­கு­றித்த மேல­திக விசா­ர­ணைகள் எதிர்­வரும் 26 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளது.

இந் நிலையில் நீதிவான் ரங்க திஸா­நா­யக்க  சாட்­சி­யத்தில் தெரி­வித்த சில விட­யங்­களை விடி­வெள்ளி வாச­கர்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்­துகிறது.

'தொலை­பேசி மணி அடித்­த­தாலும், கொட்­டாவி விட்­ட­தற்­கா­கவும் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக சிறைத் தண்­டனை வழங்­கப்­பட்ட வர­லா­றுகள் எமது நீதித்­து­றையில் உள்­ளன. இந் நிலையில் நீதி­மன்ற விசா­ர­ணையின் இடை நடுவே, நீதி­வா­னுக்கு நேராக தனது விரல்­களை நீட்டி, எக்­னெ­லி­கொட வழக்கின் சந்­தேக நபர்­க­ளான இரா­ணுவ வீரர்­க­ளுக்கு பிணை வழங்­கு­மாறு  நீதி­வா­னுக்கே கட்­டளை இட்டும், நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தியும் நீதி­மன்றை அவ­ம­தித்த ஞான­சார தேர­ருக்கு உச்ச தண்­டனை வழங்­கப்­படல் வேண்டும். அத­னா­லேயே நான் இந்த வழக்கை அர­சி­ய­ல­மைப்பின் 105 (3) ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றுக்கு பாரப்­ப­டுத்­தினேன். ஏனெனில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றினால் இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளுக்கு கடு­மை­யான தண்­ட­னையைப் பெற்­றுக்­கொ­டுக்க முடியும்.

நீதி­மன்­றுக்கு இவ்­வா­றான இடை­யூறு ஏற்­ப­டுத்தி, சிரேஷ்ட அரச சட்­ட­வா­தியை பேடித்­த­ன­மா­னவர் எனவும் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தில் உள்­ள­வர்­களும் அப்­ப­டிப்­பட்­ட­வர்­களே என்றும் கூறி அவர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வண்ணம் ஞான­சார தேரர் நடந்­து­கொண்டார். இத்­த­கைய சம்­பவம் ஒன்­றுக்கு நான் எனது 12 வரு­ட­கால நீதிவான் சேவையில் முகம் கொடுத்­ததே இல்லை. அதனால் அந்த சம்­ப­வமும், நாளும் என்னால் மறக்க முடி­யா­தது. எனக்கு தெரிந்த வகையில் இந்த சம்­பவம் தான் நீதி­மன்றை அவ­ம­திக்கும் வித­மாக பதி­வா­கி­யுள்ள மிகப் பெரிய சம்­பவம்' என நீதிவான் ரங்க திஸா­ந­யக்க சாட்­சியம் அளித்­தி­ருக்­கின்றார்.

இந்த சாட்­சி­யங்­களில் உள்ள ஒவ்­வொரு விட­யமும் மிக முக்­கி­ய­மா­னது. ஏனெனில் நீதி­மன்ற அவ­ம­திப்பு தொடர்பில் இரு வழி­களில் நீதிவான் ஒரு­வ­ருக்கு நட­வ­டிக்கை எடுக்­கலாம்.

நீதிவான் என்ற ரீதியில் நீதி­மன்ற அமைப்புச் சட்­டத்தின் 55 (2 ) ஆவது அத்தியாயத்தின் கீழும் அரசியலமைப்பின் 105 (3) ஆவது அத்தியாயத்தின் கீழும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அமைப்பு சட்டத்தின் கீழ் நீதிவான் நடவடிக்கை எடுத்திருப்பின் அது சிறிய ஒரு தண்டனையையே ஞானசாரவுக்கு பெற்றுக்கொடுத்திருக்கும். எனினும் இங்கு நீதிவான் வழக்கை அரசியலமைப்பின் உறுப்புரைகளுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு பாரப்படுத்தியுள்ளமையானது ஞானசார தேரருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கமே. 

எனவே, நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஞானசார தேரர் மீதான குற்றம் நிரூபணமாகுமானால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படலாம்.   MFM.Fazeer

10 comments:

  1. எதுவும் நடக்க போவது இல்லை இவர் சித்தசுவதீனமற்றவர் என்று வழக்கு தள்ளி போடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையை உரக்கச் சொன்னீர்.

      Delete
    2. சும்மா அதை இதைச்சொல்லி உசுப்பேத்துறாங்க.

      Delete
  2. இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. He will never be punished! He's above the law!

    ReplyDelete
  4. There is possibility for another ethnic tense situation by this BBS against muslims in Sr Lanka before 26, and then the bloody media will try to give a message stating that a buddist hero who protect buddism will be arrested and some buddist relugious organisation will threat the government. Finally, he will be released in 5 minutes aftef arrest.

    ReplyDelete
  5. Nothing will happen but still appreciate this Homagama Judge

    ReplyDelete
  6. மக்களே!!! தயவு செய்து பெரிசா ஒரு தண்டனையையும் எதிர்பாக்காதிங்க, ஆக குறைந்த பட்ச தண்டனயான 1250.50 ரூபாய் தண்டப் பணம் கட்ட சொல்லுவாங்க...

    ReplyDelete

Powered by Blogger.