Header Ads



இன்றுமுதல் சகல பஸ்களுக்குமான, கட்டணம் அதிகரித்தது


வருடாந்த பேருந்த கட்டண சீர்திருத்தத்திற்கு அமைவாக இன்று (01) தொடக்கம் புதிய பேருந்து கட்டண முறைகள் அமுல்படுத்தப்படவுள்ளன. 

தனியார் மற்றும் போக்குவரத்து சபை பேருந்துகள் உட்பட அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளின் கட்டணங்களும் இன்று தொடக்கம் உயர்த்தப்படவுள்ளன. 

இதன்படி, 9 ரூபாவாக இருந்த ஆகக் குறைந்த பேருந்து கட்டணம் 10 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதிவேக வீதியின் கொழும்பு தொடக்கம் மாத்தறை வரையான பேருந்து கட்டண 530 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், மஹரகமவிலிருந்து காலிவரையான கட்டணம் 410 ரூபாவாகவும், காலிவரையான கட்டணம் 500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

புதிய கட்டண அதிகரிப்புக்கு அமைவாக கடவத்தையிலிருந்து காலிக்கான பேருந்து கட்டணம் 440 ஆகவும், கடவத்தையிலிருந்து மாத்தறைக்கு 540 ரூபாவாகவும், கடுவலையிலிருந்து காலி வரையான கட்டணம் 430 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

புதிய பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறியத்தர வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.