Header Ads



◆மரித்துப் போகும் மனச்சாட்சிகள்◆


இறைச்சியின் பெயரால்
சிதைக்கப்படும் மனிதமும்...
புதைக்கப்படும் புனிதமும்...
உயிர்க் கருணையை
உயிர்ப்பித்த உன்னதம்
இஸ்லாமே என்பதை
வசதியாய் மறந்திட்டு
வெறித்தன ஆட்டங்கள்...!
போலிச் சாட்டுக்களும்
பொய் வதந்திகளும்
பாரத பூமியில்
பரவலாய் அரங்கேறி...
இரத்தச் சுவையில்
இனிமை கண்டு
ஈரம் ஏதுமின்றி...
மொத்தக் குடும்பமும் -
முழு ஊருமே
முகாரியில் மூழ்கிட
மனச்சாட்சிகள்
மரித்துப் போய்...
பொதுப் பயணங்கள்
புறப்படும் பையன்கள்
உயிரற்றோராய்
ஊர் வரும் அவலம்....
இன்று வரை-
இருபதையும் தாண்டிய
இதயமற்ற படுகொலைகள்..!
சதிகளில் சிக்கி
சிந்தப்படும் குருதி-நாளை
சுவனத்துச் சுகந்தத்தில்
ஷஹீத்களாய் மலரட்டும்..!
அராஜக ஆட்டங்களால்
ஆரவாரம் செய்வோர்க்கு-உன்
அளவிலா ஆற்றலின்
அதிகாரம் உணர்த்திடு
அன்பு நிறை ரஹ்மானே..!
இஸ்லாத்தை அழித்திட
இதயம் துடிப்போரையே
இதன் பாதுகாவலர்களாய்
ஆக்கி அருளிடுவாய்
இன்ஷா அல்லாஹ்...!

•அய்மா நிஃமத்துல்லாஹ்•

No comments

Powered by Blogger.