Header Ads



கடும் வறட்சி, குதிரைகள் மரணம்


யாழ்.நெடுந்தீவு பகுதியில் வறட்சி காரணமாகவும், பராமரிப்பு இன்றியும் குதிரைகள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

நெடுந்தீவு பகுதியில் குதிரைகளின் லயம் காணப்படுகின்றது. தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக குதிரைகள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுமார் 10 இற்குட்பட்ட குதிரைகள் இதுவரையில் உயிரிழந்துள்ளன. குதிரைகளின் உயிரிழப்பு தொடர்பில், நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்ட நிலையிலும் கூட இதுவரையில் எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

குதிரை லயம் உள்ள குதிரைகளுக்கு உரிய பராமரிப்பு இன்மையால், மேலும் பல குதிரைகளும் உயிரிழந்து விடுமோ என்ற அச்சம் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே, அரச திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குதிரைகளை பாதுகாப்பதற்கும் அவற்றினை உரிய முறையில் பராமரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று பொது மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.