Header Ads



பதவி விலகுகிறார், கட்டாருக்கான தூதுவர் லியனகே

கிழக்கு மாகாண ஆளுனர் பதவியை எதிர்பார்த்திருந்த கட்டாருக்கான சிறிலங்கா தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே, அந்தப் பதவி கிடைக்காததையடுத்து, தனது தூதுவர் பதவியை விட்டு விலகவுள்ளார்.

இன்று தாம் கட்டாருக்கான பதவியை விட்டு விலகுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனர் பதவி முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகமவுக்கு வழங்கப்பட்டமை குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் கட்டாருக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட ஏ.எஸ்.பி.லியனகே, தனது பதவி விலகல் தொடர்பாக அறிவிக்க இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.

No comments

Powered by Blogger.