Header Ads



மஹிந்த, கோத்தாவின் கழுத்தைவெட்டி, பலி கொடுக்க முயற்சி

காணா­ம­லாக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்டால் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தலை­வர்­களும் தண்­டனை பெற­வேண்­டி­வரும். ஏனெனில் பட்­ட­லந்த விவ­காரத்தில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் இதில் சிக்­கிக்­கொள்ள இட­முள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.  அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

காணா­ம­லாக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களைப் பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூ­லத்­தி­னூ­டாக எமது இரா­ணு­வத்­தினர் மற்றும் அரச தலை­வர்­க­ளையும் சர்­வ­தேச மட்­டத்­திற்கு கொண்­டு­சென்று தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.  மேலும் இது நாட்டைப் பாது­காத்த இரா­ணு­வத்தை சர்­வ­தேச புலி­க­ளிடம் ஒப்­ப­டைக்கும் உபா­ய­மா­கவும் உள்­ளது.

அத்­துடன் குறித்த சம­வா­யத்­தி­னூ­டாக எவ­ரா­வ­தொ­ருவர் காணா­ம­லாக்­கப்­பட்­டமை தொடர்பில்  எந்­த­வொரு இரா­ணு­வத்­தி­னரும் சம்­பந்­தப்­பட்­டி­ருப்பின்,  இரா­ணுவப் பிரிவின் உய­ர­தி­கா­ரிகள் வரையில் தவ­றி­ழைத்­த­வர்­க­ளாகக் கருதி இரு­பது வரு­டங்கள் வரை­யி­லான  தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்க முடியும்.

இதன்­மூலம் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய  ராஜ­பக் ஷ மற்றும் முப்­ப­டை­களின் முன்னாள் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரின் கழுத்தை வெட்டி பிரிவினைவாதிகளுக்கு பலிகொடுப்பதனை அடிப்படையாகக்கொண்டே இச்சட்ட மூலத்தை நிறைவேற்றிக்கொள்ள முனைவ தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.