Header Ads



ஐ.நா. அதிகாரியுடன், விஜயதாச ராஜபக்ச சூடான வாக்குவாதம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான விசேட பிரதிநிதி பென் எமர்சனுக்கும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும் இடையில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஐ.நா விசேட பிரதிநிதியும் அவரது குழுவினரும் கொழும்பில் உள்ள நீதியமைச்சுக்கு சென்று சந்தித்த நேரத்தில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இலங்கைக்கு வந்து இங்குள்ள உண்மையான நிலைமையை புரிந்துக்கொள்ளாது பொய்யான தகவல்கள் அடங்கிய அறிக்கைகளை ஐ.நா பிரதிநிதிகள் சமர்ப்பிப்பதாகவும், இதன் காரணமாக இலங்கை பெரிய அவபெயர் ஏற்படுவதாக கூறி அமைச்சர், ஐ.நா பிரதிநிதி எமர்சனிடம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனையடுத்து எமர்சன், பல புள்ளிவிபரங்களையும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சூடாக பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.