Header Ads



தப்பி ஓடியவரின் புகைப்படம் வெளியானது


துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பி ஓடிய நபரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

தலைக்கவசம் இன்றி குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

 நல்லூர் பகுதியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு குறித்த நபர் லிங்கம் கூல் பார் வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றிருந்தார்.

குறித்த மோட்டார் சைக்கிளை யாழ். அரியாலை பகுதியில் வைத்து நேற்று பொலிஸார் மீட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று குறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பி ஓடிய நபரின் புகைப்படமும் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நீதிபதியின் ஒரு மெய்ப்பாதுகாவலர் காயமடைந்திருந்ததுடன், ஒருவர் உயிரிழந்திருந்தார்.

No comments

Powered by Blogger.