Header Ads



அமெரிக்க தூதரகத்திற்கு, ஆட்டோ சாரதிகள் எச்சரிக்கை


 சிறிலங்காவில் அமெரிக்க குடிமக்கள்- குறிப்பாக பெண்கள், முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு, அமெரிக்க தூதரகம் வெளியிட்டிருந்த எச்சரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.


கொழும்பில் அமெரிக்க குடிமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் முச்சக்கரவண்டி சாரதிகள் முறைகேடாக நடப்பதாக வந்துள்ள முறைப்பாடுகளை அடுத்து, பயண எச்சரிக்கையை விடுப்பதாக அமெரிக்க தூதரகம் அறிவித்திருந்தது,

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயண எச்சரிக்கையை விலக்கக் கோரியும், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக, முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

அத்துடன் அமெரிக்க தூதரகத்தில் மனு ஒன்றையும் அவர்கள் கையளித்துள்ளனர்.

அதேவேளை பயண எச்சரிக்கையை அமெரிக்கா விலக்கிக் கொள்ளாவிடின், அமெரிக்கத் தூதரகத்துக்கு வெளியே பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுப்போம் என்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் எச்சரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.