கொச்சிக்கடையில் நகை கடைக்கு, குடும்பமாக சென்று திருடிய குழு
(எம்.இஸட்.ஷாஜஹான்)
கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நகை விற்பனை நிலையம் ஒன்றில் ஆறு இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான 13 பவுண் தங்க நகைகளை கொள்வனவு செய்வது போன்று அங்கு வருகை தந்த நால்வர் அடங்கிய குழு திருடிச் சென்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற அன்று குறித்த நகைக் கடைக்கு ஆண் ஒருவரும் மூன்று பெண்களும் நகைகள் வாங்குவது போன்று வந்துள்ளனர். அவர்களில் 13 மற்றும் 18 வயதான இரு பெண்கள் அடங்கியிருந்தனர்.
இவர்களுடன் வருகை தந்த ஆண் கடையில் இருந்த நகைப் பெட்டியை திருடி தான் அணிந்திருந்த சாரத்துக்குள் மறைத்து வைக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வெள்ளிக்கிழமை இரவு கடையிலிருந்த நகைகளின் இருப்பை உரிமையாளர் பார்த்த போதே நகைகள் திருடப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது.
இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போன்றே காணப்பட்டனர். அவர்களில் பெண் நகைகளை வாங்குவது போன்று அவற்றைப் பார்வையிட்டுள்ளார். அவர்களுடன் வந்த ஆண் இதன்போது நகைகள் அடங்கிய பெட்டியைத் திருடி தான் அணிந்து வந்த சாரத்துக்குள் மறைத்து வைத்துள்ளார்.
அவர்களுடன் கூட வந்த இரு சிறுமியர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக திருடுவதை காணாமல் இருக்கும் வகையில் சூழ்ந்து நின்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் எந்தவித நகைகளையும் கொள்வனவு செய்யாமல் மாலை 5.12 மணியளவில் கடையிலிருந்து வெளியேறியுள்ளனர். இவைகள் கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்றார். சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
Why didn't you publish the video clip..?
ReplyDelete