Header Ads



கட்டாருக்கான அவகாசம், இன்று நிறைவு - அடுத்தது என்ன..?

கட்டார் மீதான தடையை நீக்குவதற்கு வளைகுடா நாடுகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நள்ளிரவுடன் குறித்த கால அவகாசம் முடிவடைவதாக குறிப்பிடப்படுகின்றது.

அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஈரானுடன் உறவைக் குறைத்துக்கொள்வது, கட்டாரிலுள்ள துருக்கிய இராணுவத் தளத்தை மூடுவது, கட்டார் வட்டாரத்தில் உள்ள பயங்கரவாதிகள் அனைவரையும் தங்களிடம் ஒப்படைப்பது போன்ற 13 விடயங்கள் அந்த நிபந்தனை பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இவற்றை நிறைவேற்றுவதற்கு கட்டாருக்கு 10 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் அந்த நிபந்தனைகள் தமது நாட்டின் இறையாண்மைக்கு கடும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக கட்டார் வெளிவிவகார அமைச்சர் அல் - தானி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.