Header Ads



முஸ்லிம் இளைஞருக்கு, நீதி மறுக்கப்படுவது ஏன்..?

-ARA.Fareel-

ஒரு நாட்டில் நீதித் துறையும், சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் அதி­கா­ரி­களும் சுயா­தீ­ன­மாக இயங்க வேண்டும். இதுவே ஜன­நா­ய­கத்தின் உச்ச நிலை­யாகும். ஆனால் இன்று எமது நாட்டில் சட்­டத்தை அமுல் படுத்தும் பாது­காப்பு அதி­கா­ரிகள் நேர்­மை­யாக நடந்து கொள்­கி­றார்­களா? நீதி அனை­வ­ருக்கும் சம­மாக நிலை நாட்­டப்­ப­டு­கி­றதா? என்­பது தொடர்பில் விமர்­ச­னங்கள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. 

அண்­மையில் நாட்டில் இடம்­பெற்ற நீதி­யுடன் தொடர்­பு­பட்ட இரு சம்­ப­வங்கள் மக்­க­ளி­டையே பல சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அவற்றில் ஒன்று கண்டி மாவட்­டத்தின் கடு­கண்­ணாவைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் தனது முக­நூலில் புத்­த­பெ­ருமான் தொடர்­பாக பதி­வேற்­றிய கருத்­துகள் தொடர்­பான சம்­ப­வ­மாகும்.  அடுத்­தது பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருடன் தொடர்­பு­பட்ட இஸ்­லாத்­தையும், முஸ்­லிம்­க­ளையும் குர்­ஆ­னையும் அவ­ம­திக்கும் வகை­யி­லான வெறுப்பு பேச்­சு­க­ளாகும். 

தந்­துரை சம்­பவம்

தந்­துரை கிரா­மத்தைச் சேர்ந்த 21 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் புத்­த­பெ­ரு­மானை அவ­ம­திக்கும் வகையில் தனது முக­நூலில் கருத்­துகள் வெளி­யிட்­ட­தை­ய­டுத்து அக்­கி­ரா­மத்தில் அசம்­பா­வி­தங்கள் ஏற்­பட்­டன. பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இளை­ஞர்கள் முஸ்­லிம்­களின் 9 வீடு­களை தாக்கி சேதப்­ப­டுத்­தி­னார்கள். குறிப்­பிட்ட இளைஞன் தனது முகநூல் பதிவில் கருத்­து­களை தனது புகைப்­ப­டத்­துடன் வெளி­யிட்­ட­த­னாலே பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரால் இளை­ஞனை அடை­யாளம் காண முடிந்­தது. இச்­சம்­பவம் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி மாலை நடை­பெற்­றது. 

மூன்று இளை­ஞர்கள் கைது
இச்­சம்­பவம் தொடர்பில் மூன்று இளை­ஞர்கள் கடு­கண்­ணாவைப் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு கண்டி நீதிவான் நீதி­மன்ற நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். புத்­தரை அவ­ம­தித்து தனது முக­நூலில் பதி­வு­களை பதி­வேற்­றிய முஸ்லிம் இளை­ஞரும் முஸ்­லிம்­களின் வீடு­களைத் தாக்கி சேதப்­ப­டுத்­திய பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இளை­ஞர்கள் இரு­வரும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர். விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட மூன்று இளை­ஞர்­களில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு இளை­ஞர்­களும் 14 நாட்­களின் பின்பு பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டனர். ஆனால் முஸ்லிம் இளை­ஞ­ருக்கு பிணை மறுக்­கப்­பட்­டது. அவர் தொடர்ந்தும் பிணையில் வைக்­கப்­பட்­டுள்ளார். 

முஸ்லிம் இளை­ஞ­ருக்கு பிணை மறுப்பு
புத்­தரை அவ­ம­தித்து முக­நூலில் பதி­வு­களை பதி­வேற்­றிய வழக்கு விசா­ரணை கடந்த 12 ஆம் திகதி புதன்­கி­ழமை கண்டி நீதிவான் நீதி­மன்­றத்தில் இடம்­பெற்­றது. முஸ்லிம் இளை­ஞரின் சார்பில் ஆஜ­ரான ஆர்.ஆர்.ரி. அமைப்பின் சட்­டத்­த­ரணி சைனாஸ் மொஹம்மட் சந்­தேக நப­ரான இளை­ஞ­ருக்கு பிணை வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று வாதிட்டார்.  சம்­பந்­தப்­பட்ட இளைஞர் வேறோர் நப­ருடன் மேற்­கொண்ட கருத்­தா­டல்­க­ளுக்கு பதில் வழங்கும் முக­மா­கவே புத்­த­பெ­ரு­மானைப் பற்­றிய கருத்­து­களை பதி­வேற்றம் செய்­துள்ளார். புத்­தரை அவ­ம­திக்க வேண்டும் அல்­லது ஒரு இனக்­க­ல­வ­ரத்தை உரு­வாக்க வேண்­டு­மென அவர் தனது கருத்தை பதி­வேற்­ற­வில்லை.

அதனால் இளை­ஞ­ருக்கு பிணை வழங்­கப்­பட வேண்­டு­மென ஆர்.ஆர்.ரி அமைப்பின் சட்­டத்­த­ரணி வாதிட்டார். இளைஞர் தவ­றான அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்டே நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.  இச்­சந்­தர்ப்­பத்தில் நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த கடு­கண்­ணாவை பொலிஸார் பிணை வழங்­கு­வது தொடர்பில் உயர் அதி­கா­ரியே கருத்து தெரி­விக்க வேண்டும் என்று வேண்­டிக்­கொண்­ட­தை­ய­டுத்து நீதிவான் பிணை வழங்­கு­வதை மறுத்து எதிர்­வரும் 23 ஆம் திக­திக்கு வழக்கு விசா­ர­ணையை ஒத்தி வைத்தார்.  குறிப்­பிட்ட இளைஞன் தொடர்ந்து பிணை வழங்­கப்­ப­டாது கடந்த 45 நாட்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இளைஞன் புத்­த­பெ­ரு­மானைப் பற்றி தன்­னை­ய­றி­யா­மலே ஒரு­வ­ருக்கு பதில் வழங்கும் வகையில் முக­நூலில் பதி­வேற்­றிய கருத்­து­க­ளுக்­காக 45 நாட்­க­ளுக்கும் மேலாக மேலும் 14 நாட்கள் விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்­டி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 

இதே­வேளை வரு­டக்­க­ணக்கில் முஸ்­லிம்­களைப் பற்­றியும் இஸ்­லாத்தைப் பற்­றியும் புனித குர்­ஆனைப் பற்­றியும் அவ­தூறு பேசி­வந்த ஞான­சாரர் தேரர் பல பிடி­யா­ணை­க­ளுக்குப் பின்பு நீதி­மன்றில் ஆஜ­ரான போது அவ­ருக்குப் பிணை வழங்­கப்­பட்­டமை தொடர்பில் மக்கள் விசனம் தெரி­விக்­கி­றார்கள். 

பொலிஸார் நேர்­மை­யாக செயற்­ப­டு­வார்­களா!
தந்­துரை இளைஞன் விவ­கா­ரத்தில் பொலிஸார் நீதி­மன்­றுக்கு தயா­ரித்து வழங்­கி­யுள்ள  'பீ' அறிக்கை மிகவும் கடு­மை­யா­ன­தா­கவே இருக்க வேண்டும். அத­னா­லேயே அவ­ருக்கு தொடர்ந்தும் பிணை மறுக்­கப்­பட்­டுள்­ளது. முக­நூலில் புத்­த­பெ­ரு­மானைப் பற்றி தவ­றான கருத்­து­களை அதன் பார­தூரம் தெரி­யாது அவர்  பதி­வேற்றி விட்டார். அதற்­காக 45 நாட்கள் கடந்தும் தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். ஆனால் இன­வாதம் பேசி நாட்டில் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­க­ளுக்கும் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களின் தீவைப்­புக்கும் கார­ண­மாக இருந்த ஞான­சார தேரர் பிணையில் விடப்­பட்­டுள்ளார்.

அல்­லாஹ்வைத் தூசித்தவர் அவர். நபிகள் நாயகத்துக்கு சவால் விட்டவர் அவர். குர்ஆனைத் தூற்றியவர் அவர். தூசணம் பேசி முஸ்லிம்களை இழிவுபடுத்தியவர் அவர். அவரது நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றிற்கு முதலில் வழங்கிய 'பீ' அறிக்கை மிகவும் பயங்கரமானது.   நாடே பற்றி எரியும் வண்ணம் அதில் குற்றச்சாட்டுகள் இருந்தன என நீதிவானே அதன் பயங்கரம் தொடர்பில் நீதிமன்றில் அறிவித்துள்ளார். இந்த 'பீ' அறிக்கையை பொலிஸார் இடையீட்டு மனு ஒன்றினூடாக மாற்றியமைத்து புதிய விடயங்களைப் புகுத்தி விட்டார்கள்.

ஞானசார தேரருக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்கான தந்திரமே இது. எது எவ்வாறாயினும் ஞானசார தேரர் பிணையில் வெளியேறி இன்று சுதந்திரமாக இருக்கிறார். நீதிபதியின் வார்த்தையில் கூறுவதென்றால் 'நாடே பற்றி எரியும் வகையிலான குற்றச்சாட்டுகளே முதலில் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன'. ஆனால் இன்று ஓர் முஸ்லிம் இளைஞன் முகநூல் பதிவேற்றத்தில் புத்தபெருமானை அவமதித்தார் என்பதற்காக விளக்கமறியலில் நாட்களைக் கடத்துகிறார். ஏன் இந்த வேறுபாடுகள் காவி உடைக்கு விசேட சலுகையா!

No comments

Powered by Blogger.