Header Ads



கோத்தபாய செய்ததையே இன்று, நல்லாட்சி செய்கிறது - விஜித ஹேரத்

கோத்தபாய ராஜபக்ஷ அன்று செய்ததையே இன்று நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரும் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அன்று கோத்தபாய செய்ததையே இன்று நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினர் செய்வதுடன், ஒருபுறத்தில் பேச்சும், மறுபுறத்தில் குண்டர்களை ஏவிவிட்டு தாக்குதலும் நடத்தப்படுகின்றன என கூறியுள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கொலன்னாவ ஆயுதக் களஞ்சியசாலை வளாகத்துக்குள் களமிறங்கி தாக்குதல் நடத்தியவர்களின் படங்களை சபையில் வெளியிட்டார்.

அத்துடன், வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்து விசாரணை நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.