Header Ads



இலங்கை அழகியாக, வரத்துடித்தவரின் செயல்..!

மிஸ் இலங்கையாக தெரிவாகும் நோக்கில் கொழும்பு சென்ற யுவதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்றைய தினம் மிஸ் இலங்கை (இலங்கை அழகி) போட்டிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது.

இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்று தெரிவாகத் தவறிய யுவதியொருவர், நேர்முகத் தேர்வில் தெரிவான யுவதி ஒருவரின் செல்லிடப்பேசியை திருடியுள்ளார்.

இவ்வாறு திருடப்பட்ட செல்லிடப்பேசி 38500 ரூபா பெறுமதியானது என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த யுவதி நேற்று கொழும்பு - கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதேவேளை, யுவதியை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.

நட்சத்திர ஹோட்டலின் சீ.சீ.டி.வி கமரா பதிவுகளை கொம்பனித்தெரு பொலிஸாருக்கு வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.