Header Ads



இளஞ்செழியன் மீது துப்பாக்கிச் சூடு, இருவர் கைது, மெய்ப்பாதுகாவலர் பலி

நல்லூரில் நேற்று மாலை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாலை நல்லூரில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், உந்துருளி ஒன்றில் தப்பிச் சென்றிருந்தார்.

இதையடுத்து நடத்தப்பட்ட  விசாரணைகளின் அடிப்படையில், அனலைதீவைச் சேர்ந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இன்று இரவு 12.20 மணியளவில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார். 

யாழ்.நல்லூர் பின் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்திருந்தனர். 

காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.  அதில், சார்ஜென்ட் தர பொலிஸ் உத்தியோகத்தர் இரவு 12.20 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார். 

No comments

Powered by Blogger.