Header Ads



பிரதமர் பொய் சொல்லியும், வாய் திறக்காத முஸ்லிம் தலைமைகள்..!

இலங்கை நாட்டில் சில பேரினவாத குழுக்களுக்கெதிராக நீதியை நிலை நாட்டவேண்டிய தேவை உள்ளது. இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு அப்பால் பேரினத்தை சேர்ந்த சகோதர அரசியல்வாதிகளின் பங்களிப்பும் மிகவும் அத்தியாவசியமானது. பேரின சகோதர அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் கரிசனை கொள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளின் செயற்பாடுகள்மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்கது.  

அளுத்கமை கலவரத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் வைத்து பிரதமர் ரணில்விக்கிரமசிங்க கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய்யென தெரிந்தும் இது வரை முஸ்லிம்கட்சிகள் எதுவும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தாமை கவலையளிக்கின்றது.முஸ்லிம் அரசியல் வாதிகள் இப்படி இருக்கும்நிலையில் பேரின சகோதரர்களின் ஆதரவைஎதிர்பார்க்க முடியாது.

முஸ்லிம் கட்சிகள் எதிர்வரும் தேர்தல்களில் யானையின் வால் பிடித்து திரிய வேண்டிய தேவை இருப்பதால் இவர்கள் ஒரு போதும் பிரதமரை நேருக்கு நேர் சுட்டிக் காட்டி எந்தவிதமானவார்த்தை பிரயோகங்களையும் மேற்கொள்ளமாட்டார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் தனது பலமான எதிர்ப்பை வெளிக்காட்டி வரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மறைக்காரை முஸ்லிம் கட்சிகள் முன் மாதிரியாக கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தில் பேசப்படும் பேச்சுக்களுக்கான தெளிவு பாராளுமன்றத்தில் வைத்து வழங்கப்படுவதே மிகவும் பொருத்தமானதாகும். இலங்கையில் உள்ள முஸ்லிம் கட்சிகள் ஒருவரை ஒருவர் வீழ்த்தி முன்னேறுவதில் காட்டும் அக்கறையின் ஒரு சிறுபகுதியேனும் முஸ்லிம் மக்கள் தொடர்பிலான விடயங்களில் காட்டினால் இலங்கை முஸ்லிம்சமூகம்  என்கோ சென்றிருக்கும். இலங்கை முஸ்லிம் சமூகம் தீர்வின்றி தவிர்க்க முஸ்லிம் அரசியல் தலைமைகளே பிரதான காரணம் என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

-அ அஹமட்-

No comments

Powered by Blogger.