Header Ads



"துவேசங்களை, அரசியல்வாதிகளே பரப்புகின்றனர்” - பௌஸி

“தாங்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, மக்களிடையே இன ரீதியான துவேசங்களை, அரசியல்வாதிகளே பரப்புகின்றனர்”  என, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்தார்.

“மக்களின் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தி, சகல மக்களும் ஒரே குடும்பம் போல் இணைந்து வாழ்வதற்கு என்னால் இயன்ற திட்டங்களை அமுல்ப்படுத்தி வருகிறேன்” என்றும் அவர் கூறினார்.

தன்னாமுனை மியானி நகர் பொன்தானா மண்டபத்தில் ​இன்று இடம்பெற்ற தேசிய ஒருங்கிணப்பு நல்லிணக்க அமைச்சின் அனுசரணையில், நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே, இவர் இவ்வாறு தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.