Header Ads



கடும் வறுமை, அரி­வாளை அடகுவைத்து பிள்­ளையை வைத்­தி­ய­சா­லைக்கு கூட்டிச்சென்ற தந்தை

வரட்­சியின் கார­ண­மாக தொடர்ந்து நான்கு தட­வைகள் விளைச்சல் பாதிக்­கப்­பட்டு கடும் வறுமை நிலைக்கு ஆளான விவ­சாயி ஒருவர் தனது அரி­வாளை 300 ரூபா­வுக்கு அடகு வைத்த சம்­பவம் ஒன்று   விலாச்­சிய பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

விளைச்சல் பாதிக்­கப்­பட்­ட நிலையிலும் தனது பிள்ளை கடும் சுக­யீ­ன­முற்­றி­ருந்­தமையாலும் அவரை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்ல பணம் இல்­லா­தி­ருந்த கார­ணத்தால் தான் விவ­சா­யத்­துக்கு பயன்­ப­டுத்­தி­வந்த 800 ரூபா பெறு­ம­தி­யான அரி­வாள் ஒன்றை 300 ரூபா­வுக்கு அடகு வைத்­துள்ளார்.

கடந்த சில மாதங்­க­ளாக உணவுப் பொருட்கள் வாங்­கு­வ­தற்கு பண­மில்­லாமை கார­ண­மாக விலச்­சிய பிர­தே­சத்­தி­லுள்ள வர்த்­தகர் ஒரு­வ­ரிடம் கட­னுக்கு உணவு பொருட்­களை பெற்­றுள்ளார். 

இந்­நி­லையில், அதே வர்த்­த­க­ரிடம் சென்று, தனது அரி­வாளை வைத்­துக்­கொண்டு தனக்கு 300 ரூபா பணம் தந்து உத­வு­மாறு குறித்த விவ­சாயி கோரி­யுள்ளார்.

ஏற்­க­னவே தனக்கு கடன் தர­வி­ருப்­ப­தனால் முதலில் கோப­ம­டைந்து அவரை ஏசிய வர்த்­தகர், பின்னர் அவர் மீது இரக்கம் கொண்டு அரி­வாளை அவ­ரி­டமே திருப்பிக் கொடுத்து அவர் கேட்­ட­படி பணத்­தையும் வழங்­கி­யுள்ளார்.

எனினும், அந்த ­வி­வ­சாயி தான் பணத்தை திருப்பி தரும் வரையில் அரிவாள் தங்களிடமே இருக்கட்டும் எனக்கூறி அதனை பலவந்தமாக அந்த வர்த்தகரிடமே கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

1 comment:

  1. எங்கே அப்ப போனார்கள் நல்லாட்சி !! ???

    ReplyDelete

Powered by Blogger.