Header Ads



முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு, பகி­ரங்க அழைப்பு

எதிர்­வரும் கிழக்கு மாகாண  சபைத்  தேர்­தலில் முஸ்லிம் கூட்­ட­மைப்பு போட்­டி­யி­டு­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ளது.  முஸ்லிம் கூட்­ட­மைப்­புடன்  கைகோர்ப்­ப­தற்கு ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும்   பகி­ரங்க  அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது என முஸ்லிம்  கூட்­ட­மைப்­பொன்­றினை  உரு­வாக்­கு­வ­தற்கு மும்­மு­ர­மாக செயற்­பட்­டு­வ­ரு­ப­வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்­கி­ரஸின்   முன்னாள்  பொதுச் செய­லா­ள­ரு­மான எம்.ரி.ஹசன்  அலி 'விடிவெள்ளி'க்குத் தெரி­வித்தார். 

முஸ்லிம் கூட்­ட­மைப்பு தொடர்பில் பல்­வேறு  தரப்­பி­னரால் வெளி­யி­டப்­பட்டு வரும் கருத்­துகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர்  இவ்­வாறு  தெரி­வித்தார்.  அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

முஸ்லிம்  கூட்­ட­மைப்­பொன்று  கிழக்கில்   உரு­வாகக் கூடாது என்றும்  அதனை  இல்­லாமற் செய்ய வேண்­டு­மென்றும்  பல்­வேறு  தரப்­புகள்  முயற்சி செய்து வரு­கின்­றன. இதன் பின்­ன­ணியில் பெரும் தேசிய   கட்­சி­களின் முக­வர்கள்  செயற்­பட்டு வரு­கி­றார்கள். முஸ்லிம்  கூட்­ட­மைப்­பொன்று  உரு­வானால் பெரும் தேசிய  கட்­சி­க­ளுக்கு முஸ்­லிம்­களின்  வாக்­குகள் இல்­லாமற்   போகும் என்ற பீதி  அவர்­க­ளுக்குள்   ஏற்­பட்­டுள்­ளது. 

வட­மா­கா­ணத்தில் தமிழ் மக்கள் பிரிந்து வாக்­க­ளித்­தாலும் அங்கு  ஒரு தமிழர்  முத­ல­மைச்­ச­ராக பத­வி­யேற்க முடியும். அவ்­வா­றான சூழ்­நி­லையே அங்கு நில­வு­கி­றது. கிழக்கில் நாம் பிரிந்து வாக்­க­ளித்தால் எம்­மவர் ஒருவர்  முத­ல­மைச்­ச­ராக வர­மு­டி­யாது. அது அவர்­க­ளது உரிமை,  அதனை  நாம் பிழை­யாக  பார்க்க முடி­யாது.  இதே உரிமை  எமக்கும் உண்டு. ஆனால் நாம் இதற்கு  முக்­கி­யத்­துவம்  கொடுப்­ப­தில்லை. கிழக்கில்  முத­ல­மைச்சர் பதவி யாருக்கு  வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்­பதை  பெரும்  தேசிய  கட்­சி­களின்  உத­வி­யு­டனே தீர்­மா­னிக்க வேண்­டி­யுள்­ளது.  எனவே முஸ்­லிம்கள் நாம் ஒரு கூட்­ட­மைப்­பாக செயற்­பட வேண்­டிய  நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. 

கிழக்கில்  தமிழ், முஸ்லிம் சமூகம் ஒற்­று­மைப்­ப­டு­வ­தற்கு  முயற்­சிக்க வேண்டும்.  ஒற்­று­மைப்­ப­டு­வதன் மூலமே  எமது  உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும். இரு­த­ரப்பும்  சுமு­க­மான  பேச்­சு­வார்த்­தைகள் மூலம்   இணக்­கப்­பா­டு­களை எட்­ட­வேண்டும்.  இந்த இலக்கை முஸ்லிம் கூட்­ட­மைப்பு மைய­மாகக் கொண்டு  செயற்­படும்.  தமிழ் மக்கள் அர­சி­யலில்  தியாக மனப்­பான்­மை­யுடன்  செயற்­ப­டு­கி­றார்கள். இந்த தியாக  சிந்­த­னைகள் எமக்­குள்ளும்  உரு­வாக வேண்டும். 

எந்­த­வொரு  அதி­கா­ரத்­தையும் எதிர்­பார்த்து நான் முஸ்லிம் கூட்­ட­மைப்பை  உரு­வாக்கும் முயற்­சி­களில் ஈடு­ப­ட­வில்லை.  எனக்கு தேசி­யப்­பட்­டியல் நிய­மனம்  வழங்­கப்­ப­ட­வில்லை. அத­னாலே முஸ்லிம்  கூட்­ட­மைப்­பொன்­றினை உரு­வாக்கும்  நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ளேன் என்று  சிலர் தெரி­விக்­கி­றார்கள். இது தவ­றான கருத்­தாகும்.  என்னை பொதுத்­தேர்­தலில்  போட்­டி­யி­டு­வ­தற்கு விட்­டி­ருந்தால்  இந்தப் பிரச்­சினை ஏற்­பட்­டி­ருக்­காது. 

பெரும் தேசியக்  கட்­சிகள் எமக்­கான  நிலைமையினையும் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. வடக்கில்  தமிழ் மக்கள் பல்வேறு  பிளவுகளுக்குள்ளும்   ஒற்றுமைப்படுவது போன்று  கிழக்கில் முஸ்லிம்கள் நாம் ஒற்றுமைப்பட வேண்டும். இதுவே முஸ்லிம் கூட்டமைப்பின் இலக்காகும் என்றார்.  

1 comment:

  1. Rauf Hakeem has no consideration to the Muslim Community issues or the “MUSLIM FACTOR” at all. The “Yahapalana Government” is NOT going listen to the SLMC, ACMC, Muslim Civil Society Leaders, Community Leaders and Ulema Sabai Leaders, though they have been making “BIG NOISES” about the “MUSLIM FACTOR” over the last two years. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is by only expressing and showing our political REPRESENTATIVE strength unitedly that we can gain our position as equals in the country. We can support any political party or idealogy, but emerging as a “NEW POLITICAL FORCE”, we will stand to gain what we are losing. We can even do this as an “Independent Group” too. Supporting the alliance of HASSANALI, BASHEER SEGU DAWOOD AND “THE KILAKKIN ELURCHI” MOVEMENT GROUPS CAN BE A REALITY. THE NEW POLITICAL FORCE OF THE MUSLIM YOUTH IN THE EAST HAS TO SUPPORT THE FORMATION OF THE “MUSLIM ALLIANCE”, INSHA ALLAH. “THE MUSLIM VOICE” FULLY SUPPORTS THE FORMATION OF THIS MUSLIM ALLIANCE TO CONTEST THE PROVINCIAL COUNCIL ELECTIONS, ESPECIALLY THE EASTERN PROVINCIAL COUNCIL, Insha Allah.
    Noor Nizam. Convener – “The Muslim Voice”.

    ReplyDelete

Powered by Blogger.