Header Ads



ஒரேயொரு ஐ.தே.க. உறுப்பினர் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 40 வருட நாடாளுமன்ற வாழ்க்கை முழுமையடைந்துள்ளது.

40 வருட நிறைவை முன்னிட்டு ஐக்கிய தேசிய கட்சியினால் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1977ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூலம் முதல் முறையாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு சென்றார்.

அதன் பின்னர் கடந்த 40 வருடங்களாக அவர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்துவரும் அரசியல்வாதியாக செயற்பட்டு வருகிறார்.

தொடர்ந்து 40 வருடங்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஒரேயொரு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.