Header Ads



செப்டெம்பரில் நல்லாட்சிக்கு, காத்திருக்கும் அதிர்ச்சி

அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளை வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 18 பேர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக காணி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முடிவடைய உள்ளதால், அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய பின்னர் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாடாளுமன்றத்தில் இயங்க போவதாகவும் டி.பி.ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.