Header Ads



இலங்கை வரும் 7 நாட்டவர்கள் மீது, உன்னிப்பான கண்காணிப்பு

பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை உன்னிப்பாக கண்காணிக்க, சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக் கரிசனைகளைக் கருத்தில் கொண்டே, இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

சிரியா, பாகிஸ்தான், எகிப்து, ஐவரிகோஸ்ட், கானா, நைஜீரியா, கமரூன் ஆகிய ஏழு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நுழை விசைவு வழங்கப்படுவதற்கு முன்னர், முழுமையான ஆய்வுக்குட்படுத்தப்படும்.

ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக சிரியா மற்றும்  எகிப்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஆய்வுக்குட்படுத்தப்படுவர். இந்த நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்குள் ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற அச்சம் காணப்படுகிறது.

கானா, நைஜீரியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணகள் சட்டவிரோத குடியேற்றம் குறித்தும், பாகிஸ்தானில் இருந்து வருவோர் அடைக்கலம் கோருவது குறித்தும் கண்காணிக்கப்படுவர்.

அதேவேளை, ஆப்கானிஸ்தானில் இருந்து வருவோரைக் கண்காணிக்கும் நகர்வுகளும், மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் உகண்டாவில் இருந்து வருவோரும் கூடிய விரைவில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவர்.

No comments

Powered by Blogger.