Header Ads



7 மாதத்தில் 3,785 சிறுவர் துஷ்­பி­ர­யோக முறைப்­பா­டுகள் - 47 சிறுவர் கடத்தல்கள்

இந்த ஆண்டில் இது­வ­ரை­யி­லான ஏழு­மாத காலத்தில்  3 ஆயி­ரத்து 785 சிறுவர் துஷ்­பி­ர­யோக முறைப்­பா­டுகள் பதி­வா­கி­யுள்­ள­தாக தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. கொழும்­பி­லேயே அதி­க­ள­வி­லான   இவ்­வா­றான சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­மையும் தெரிய வந்­துள்­ளது. இதே­வேளை, கடந்த ஐந்து மாதங்­களில் 47 சிறுவர் கடத்தல் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன.

இலங்­கையில் பல்­வேறு குற்­றங்கள் பதி­யப்­பட்டு வரும் நிலையில் சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள் இவற்றில் அதி­க­மாக இடம்­பெற்று வரு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. இந்த ஆண்டில் இது­வ­ரை­யி­லான காலப் பகுதி வரையில்  3 ஆயி­ரத்து 785 சிறுவர் துஷ்­பி­ர­யோக குற்­றங்கள் பதி­வா­கி­யுள்­ள­தாக தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை குறிப்­பிட்­டுள்­ளது. 

இவற்றில் 956 முறைப்­பா­டுகள் சிறு­வர்கள் மீதான வன்­மை­யான தாக்­குதல் எனவும், 602 முறைப்­பா­டுகள் குழந்­தை­களின் கல்வி உரிமை பறிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும், 426 முறைப்­பா­டுகள் சிறு­வர்கள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும், 117 முறைப்­பா­டுகள் குழந்­தை­களை மிகவும் மோச­மான வகையில் பாலியல் வன்­கொ­டு­மை­ க­ளுக்கு உட்­ப­டுத்­தி­யமை தொடர்­பிலும் 102 முறைப்­பா­டுகள் சிறு­வர்­களை வேலைக்கு அமர்த்­தி­யமை குறித்தும் பதி­யப்­பட்­டுள்­ளன.  அதேபோல் கடந்த ஐந்து மாதங்­களில் 47 சிறுவர் கடத்தல் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. 

மேலும் இலங்­கையில் அதி­க­ள­வி­லான குற்­றங்கள் பதி­யப்­பட்­டுள்ள மாவட்­ட­மாக கொழும்பு மாவட்டம் பதி­வா­கி­யுள்­ளது. கொழும்பில் கடந்த ஆறு மாத­கா­லத்தில் 569 குற்­றச்­சாட்­டுகள் பதி­வா­கி­யுள்­ளது.

கம்­பஹா மாவட்­டத்தில் 420 முறைப்­பா­டு­களும், களுத்­துறை மாவட்­டத்தில்  283 சம்­ப­வங்­களும் காலி மாவட்­டத்தில் 259 சம்­ப­வங்­களும், இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 214 குற்­றச்­சாட்­டு­களும் பதி­வா­கி­யுள்­ளன. மேலும் சிறுவர் கடத்தல் சம்­ப­வங்கள் மற்றும் சிறுவர் மீதான வன்­கொ­டு­மைகள், பாலியல் தொல்­லைகள் குறித்து முறைப்­பாடு செய்ய தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை 1929  என்ற அவசர இலக்கத்தை வழங்கியுள்ளது.

இந்த இலக்கத்துடன் அழைப்பை  ஏற்படுத்தி குறித்த முறைப்பாடுகளை உடனடியாக அறியப்படுத்த முடியும்.மேலும் இது 24 மணிநேர சேவையாக செயற்படுவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட் டுள்ளது.

No comments

Powered by Blogger.