யாழ்ப்பாணத்தில் இளைஞர்குழு, பொலிஸார் மீது வாள்வெட்டு - 3 பேர் காயம்
-பாறுக் ஷிஹான்-
யாழ் கொக்குவில் பொற்பதி வீதியில் வைத்து 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 ற்கும் மேற்பட்ட இனம்தெரியாத இளைஞர் குழுவினரால் இரண்டு பொலிஸார் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (30) கொக்குவில் பொற்பதி வீதியில் உள்ள நந்தாவில் அம்மன் கோவில் அம்மன் வீதியில் நண்பகல் 12.30 மணியளவில் கோப்பாய் போலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு போலீசார் விசாரணைக்கு சென்ற போது இருவரின் மீதும் வாள்வெட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது .
இதன் போது இரு பொலிஸ் அதிகாரிகயும் குறித்த குழுவினர் துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளனர்.
இத்தாக்குதலினால் யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் இரு தமிழ் மற்றும் சிங்கள பொலிஸாரே இலக்காகியுள்ளனர்.
குறித்த இரு பொலிஸாரும் துப்பாக்கிகளை கொண்டு செல்லாமல் பொது மக்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக சென்ற போதே இக் குழுவினர் இவர்களை பின் தொடர்ந்து சென்று வெட்டியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள இரு பொலிஸ் அதிகாரிகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment