Header Ads



மைத்திரியிடம் உறுதிமொழி வழங்கிய 3 பேர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமேதா ஜயசேன, சனத் பஸ்நாயக்க மற்றும் இந்திக்க பண்டாரநாயக்க ஆகிய மூவரும் தொடர்ந்தும் தங்களது ஆதரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர்.

இவர்கள் மூவரும் எக்காரணத்தைக் கொண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசை விட்டு நீங்கப்போவதில்லையென உறுதிமொழி வழங்கியுள்ளனர்.

இதேவேளை, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் அரசாங்கத்தை விட்டு விலகவுள்ளனர் என அவர்களது புகைப்படங்களுடன் சிங்கள நாளிதழொன்று கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.

அந்தச் செய்திக்கு மறுப்புத் தெரிவிக்கும் முகமாகவே அரசாங்கத்தை விட்டு விலகப்போவதில்லை என அவர்கள் மூவரும் கூட்டாக உறுதிமொழி வழங்கியுள்ளனர்.

No comments

Powered by Blogger.