Header Ads



3 ஆண்களுடன் ஆபாசத்தில் ஈடுபட்ட, பிக்குவுக்கு 3 வருட கடூ­ழிய சிறை

சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட 18 வய­துக்கு குறை­வான ஆண்  ஒரு­வ­ரையும்  மற்­றொரு இளை­ஞ­ரையும் ஈடு­ப­டுத்தி பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ருடன் ஆபாச செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் குற்­ற­வா­ளி­யான பிக்கு  ஒரு­வ­ருக்கு 3 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை மற்றும் ஒரு இலட்ச ரூபா அப­ரா­தமும் விதித்து கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

அத்­துடன், மேற்­படி அப­ராதத் தொகையை செலுத்தத் தவ­றினால் மேலும் 2 வருட சிறைத்­தண்­ட­னையை அனு­ப­விக்க தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

மாளி­கா­வத்தை மாடி குடி­யி­ருப்பு தொகு­தியில் 3 ஆவது மாடி­யி­லுள்ள வீடொன்றில் ஆபாச காணொ­ளி­களை பார்த்துக் கொண்டு ஆபா­ச­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தாக மேற்­படி நால்­வ­ருக்கு எதி­ராக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி வழக்கு விசா­ர­ணைக்கு உட்­பட்­டு­வந்த காலப்­ப­கு­தி­யினுள், குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ஆளா­கி­யி­ருந்த பொலிஸ் அதி­காரி உயி­ரி­ழந்­த­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில், சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய ஏனைய குற்­ற­வா­ளி­க­ளான இளை­ஞர்கள் இருவருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா ஒருவருட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

No comments

Powered by Blogger.