Header Ads



2 முஸ்லிம் எம்.பி.க்கள் ஜனாதிபதி, பிரதமரை சந்தித்தபின் இறுதி தீர்மானம்

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்.பி.களில் சிலர் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படுவதற்கு மும்முரம் காட்டிவருவதாக தெரிவருகிறது. 

அவ்வுறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சில தினங்களில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இது தொடர்பிரலான இறுதி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிய முடிகிறது

அண்மைக்காலமாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வந்த  பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தால் உரிய தீர்வு முன்வைக்க முடியாது போயுள்ளது. அதனால் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். எனவேதான் அவ்வுறுப்பினர்கள் அரசாங்கத்திருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படுவது தொடர்பில் கரிசனை காட்டி வருகின்றனர்.

(எம்.சி.நஜிமுதீன்)

No comments

Powered by Blogger.