Header Ads



அஸ்­கி­ரிய பீடத்தின் சிவப்பு அறிக்­கை, அரசாங்கத்திற்கு எதிரான சத்தியாக்கிரகமும் நாளை ஆரம்பம்

அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரரின் சிவப்பு அறிக்­கையில் குழப்பம் அடைந்­துள்ள அர­சாங்கம் பிக்­கு­க­ளி­டையே பிள­வு­களை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றது. தாய் நாட்டை பாது­காக்க அனைத்து பௌத்­தர்­களும் ஒன்­றி­ணைந்து நாளை புதன் கிழமை இடம்­பெ­ற­வுள்ள அர­சாங்­கத்­திற்கு எதி­ரான சத்­தி­யாக்­கி­ர­கத்தில் கலந்து கொள்ள வேண்டும் என பெங்­க­முவே நாலக தேரர் தெரி­வித்தார்.

இந்­தி­யாவின் ' றோ ' உள்­ளிட்ட சர்­வ­தேச சூழ்ச்­சியின் பின்­ன­ணியில் நாட்­டிற்கு ஒவ்­வாத ஆட்சி அமைந்­துள்­ளது. இதற்கு முடிவு கட்­டு­வ­தற்­கா­கவே  இந்த சத்­தி­யாக்­கி­ரகம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.   அர­சி­யல்­வா­திகள் கோவில்­களில் தேங்காய் உடைப்­பது போன்ற விடயம் இது­வல்ல. சுமார் 68 இலட்சம் பேர் பங்­கு­பற்றும் சத்­தி­யாக்­கி­ரக போராட்­டத்தை அநா­வ­சி­ய­மாக கேலி செய்து சாபத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பொர­ளையில் அமைந்­துள்ள ஸ்ரீ வஜி­ராஸ்­ரம விகா­ரையில் இடம்­பெற்ற விஷேட ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையிலேயே    பெங்­க­முவே நாலக தேரர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

நாட்டில் மக்­க­ளுக்கு ஒவ்­வாத மோச­மான ஆட்சி காணப்­படும் போது அழி­வுகள் ஏற்­ப­டு­வது இயற்­கை­யாகும். தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சி பீடம் ஏறிய பின்னர் நாட்டில் இயற்கை அழி­வு­க­ளுக்கு பஞ்­சமே இல்லை. வரட்சி , வெள்ளம் , மண் சரிவு  குப்பை மலைகள் என மக்­க­ளுக்கு அழி­வுகள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் மக்­களின் அவலக் குரல்கள் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போன்றே அர­சாங்­கத்தில் காணப்­ப­டு­கின்­றன.

மறுபுறம் அர­சாங்கம் பௌத்த மதத்தை சிதைக்கும் வகை­யிலும் பழி­வாங்கும் அர­சி­ய­லிலும் தொடர்ந்தும் ஈடு­ப­டு­கின்­றது. குறிப்­பாக தம்­புள்ள விகாரை உண்­டியல் மீது குறி வைத்து நல்­லாட்சி அர­சாங்கம் தற்­போது செயற்­ப­டு­கின்­றது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தம்­புள்ள விகாரை உண்­டியல் விட­யத்தில் தீவி­ர­மாக செயற்­ப­டு­கின்றார்.

எனவே அவரை அந்த பத­வியில் இருந்து நீக்­கு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.மேற்­கு­ல­கத்தின் கைபொம்­மை­யாக இலங்கை திக­ழ­வேண்டும் சதிகா­ரர்­களின் நோக்­க­மாகும். எனவே தான் கடந்த ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்கு மிகவும் சூழ்ச்­சி­ம­மான முறையில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டது.

இதன் பின்­ன­ணியில் இந்­தி­யாவின் றோ அமைப்பும் மேலும் சில சர்­வ­தேச சக்­தி­களும் காணப்­பட்­டன. அவர்கள் இன்று எமது தாய் நாட்டின் உரி­மை­களை அழிப்­ப­தற்கு சதி செய்­கின்­றனர்.நல்­லாட்சி அர­சாங்கம் இந்த விட­யங்கள் தொடர்பில் கவ­னத்தில் கொள்­ளாது , விகா­ரைகள் மற்றும் பிக்­குகள் இடையே பிரி­வி­னை­வா­தத்தை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது. குறிப்­பாக அஸ்­கி­ரிய மாநா­யக்க தேரரின் சிவப்பு அறிக்கை அர­சாங்­கத்தை குழப்பம் அடையச் செய்­துள்­ளது.

 எனவே அர­சாங்­கத்தின் தற்­போ­தைய போக்கை அனு­ம­திக்க முடி­யாது. அனைத்து மக்­களும் ஒன்­றி­ணைந்து போராட வேண்டும். நாளை புதன் கிழமை நாட­ளா­விய ரீதியில் மாலை 5.48 சுப நேரத்தில் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான சத்­தி­யாக்­கி­ரக போராட்டம் இடம்­பெ­ற­வுள்­ளது. மக்கள் அனை­வரும் அருகில் உள்ள விகா­ரை­க­ளிலோ அல்­லது வீடு­களில் உள்ள புத்தர் சிலை­க­ளுக்கு அரு­கிலோ விளக்­கேற்றி நாச­க­ர­மான ஆட்சி வெளி­யேறி நாட்டில் சுபீட்சம் பிறக்க வேண்டும் என பிரார்த்­திக்க வேண்டும்.

வரு­டத்தில் சிறந்த சுப நேரத்தில் இந்த சத்­தி­யாக்­கி­ரக போராட்டம் இடம்­பெ­று­கின்­றது. எனவே நிச்­சயம் பலன் கிடைக்கும்.விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை கிளி­நொச்­சியில் ஆரம்­பித்த போது இதே போன்று நாங்கள் நாட­ளா­விய ரீதியில்  சத்­தி­யாக்­கி­ரக போராட்­டத்தை முன்­னெ­டுத்தோம் . அதன் பல­னாக போரின் வெற்றி கிடைத்தது. எனவே இந்த சத்­தி­யாக்­கி­ர­கத்தை அர­சியல் நோக்­கத்­துடன் பார்த்து கேலி செய்ய வேண்டாம்.

அர­சி­யல்­வா­திகள் கோவில்களில் தேங்காய் உடைப்பது போன்ற விடயம் இதுவல்ல. அநாவசியமாக கேலி செய்து சாபத்தை பெற்றுக் கொள்ள வேண்டாம்.தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சுமார் 68 இலட்சம் பௌத்தர்கள் நாளை புதன் கிழமை இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் இணைந்து கொள்ள உள்ளனர் . கொழும்பில் தம்மாலோக விகாரையில் பிரதான நிகழ்வு இடம்பெறும் என தெரிவித்தார். விடிவெள்ளி

No comments

Powered by Blogger.