Header Ads



முஸ்லிம்கள் நிதானம் இழக்க வேண்டாம் - மஸ்தான் எம்.பி வேண்டுகோள்


நாட்டில் முஸ்லிம்களுடைய மதத்தலங்கள், வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்படுவதும் அதன் மூலம் இனவாதிகள் இனக்கலவரத்தை கொண்டுவர முயற்சிக்கின்றமையாலும் முஸ்லிம்கள் நிதானமாக இருந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில்  மஸ்தான் எம்.பியினால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சமூக ஊடகங்களூடாக இனவாதத்தை தூண்டும் வெறுப்புப்பேச்சுக்கள், தகவல்கள் என்பனவற்றை பகிர்வதையும் பதிவு செய்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் இந்த புனிதனமான றமழான்  மாதத்தில் பொறுமையை கடைப்பிடித்து இறைவனிடம் இனக்கலவரத்தை ஏற்படுத்த முனையும் சக்திகளுக்கு சரியான தண்டனை கிடைக்கை பிரார்த்தனைகள் செய்துகொள்ள வேண்டும்.

 அண்மைக்காலமாக சில மக்கள் பிரதிநிதிகளும் முஸ்லிம் இளைஞர்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசுகின்றனர் என்னைப்பொறுத்தவரியில் அது தவறு என்றே கருதுகின்றேன் ஏனெனில் இப்பொழுது நாம் எதிர்நோக்கியுள்ள இந்த துர்பாக்கியமான நிலையினை வன்முறைகள் மூலம் தீர்க்கலாம் என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

அழுத்தகம பேருவளை சம்பவங்களே இன்னும் மக்கள் மனதை விட்டு நீங்காத நிலையில் இவ்வாறான பேச்சுக்களை நிதானமாக மக்கள் பிரதிநிதிகளும் பேசவேண்டும் என்பது எனது கோரிக்கையாகும்.

சிறுபாண்மை மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக ஆதரித்துக்கொண்டுவந்த நல்லாட்சி முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதலுக்கான நடவடிக்கைகளை ஆமை வேகத்தில் நகர்த்திச்செல்லுமாக இருந்தால் நல்லாட்சியின் எதிர்கால நகர்வுகளில் கேள்விக்குறியே ஏற்படும்.

மேலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துப்படவுள்ள அநீதிகளுக்கு எதிராக  பாராளுமன்றத்திலுள்ள முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து எடுக்கும் எந்த தீர்மானமாக இருந்தாலும் அதற்க்கு தானும் உடன்படுவேன் என ஊடகங்களுக்கு மஸ்தான் எம்.பியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.            

2 comments:

  1. யாருடா இந்த கொமடியன். இப்ப தான் விஷயம் தெரிந்தோ? அது சரி அவர்ர தலைவருக்கே எதுவும் தெரியாத போது இவருக்கு தெரியாமல் இருப்பது நியாயம் தானே.? நிறைய முஸ்லிம் எம் பி மாற காணவில்லை... எல்லோரும் இஃதிகாப் இருக்காங்க போல...

    ReplyDelete
  2. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.........20 ஆம் திகதி ரணில் மைத்ரீ சம்பிக்க இனவாதிகளின் கஞ்சி குடிக்க " நிதானம் தேவை என்று "சொன்னது போல் தெரிகிறது.முஸ்லிம்களின் பல்லாண்டு வியர்வை சிந்தி சேகறித்த சொத்துக்கள் ஒரு இனவாத தீக் குச்சியினால் மண்ணாய் போய் க்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் தலைவர்களுடன் பேச சந்தர்ப்பம் தராத இனவாதக்கூட்டணியுடம் அமர்ந்து கஞ்சி குடிக்க வெட்கம் கெட்ட சூடு சொரணைஇல்லாத தலைவர்களையா நாம் பாராளுமன்றுக்கு அனுப்பி வைத்தோம் ? சமூகத்தின் வெறுப்பையும் மீறி கஞ்சி குடிக்க சென்றால் இளைஞர்கள் உங்களது வீடுகளை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடாத்தவும் தயங்க மாட்டார்கள் ?

    ReplyDelete

Powered by Blogger.