Header Ads



"நல்லாட்சி அரசாங்கத்திற்கு சுமக்கவேண்டி ஏற்பட்டுள்ள குப்பை"

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது செயற்பாட்டு எல்லை என்ன என்பதை  புரிந்துகொண்டு செயற்படவேண்டும். எவ்வாறெனினும் விரைவில் சைட்டம்  பிரச்சினைக்கு தீர்வைக்காணுவோம் என்று  அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  கலந்துகொண்டு  கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அமைச்சரவையின் இணைப்பேச்சாளர்    தயாசிறி ஜயசேகர  மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்திற்கு சுமக்கவேண்டி ஏற்பட்டுள்ள  மற்றுமொரு குப்பையே  சைட்டம் பிரச்சினையாகும்.

எவ்வாறெனினும் இந்தப் பிரச்சினையை  விரைவில் தீர்ப்பதற்கு   அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இதுதொடர்பில் அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

 அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தமது செயற்பாட்டு எல்லை என்ன என்பதை  புரிந்துகொண்டு செயற்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.