Header Ads



சுசந்திகாவின் ஒலிம்பிக் பதக்கம், நாட்டுக்கு சொந்தமானது - தயாசிறி அதிரடி

முன்னாள் பிரபல குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்கவின் ஒலிம்பிக் பதக்கம் நாட்டுக்கு சொந்தமானது என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

2000மாம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது 200 மீற்றர் ஒட்டப் போட்டியில் பெற்றுக்கொண்ட ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்தை ஏலமிடப் போவதாக சுதந்திகா அண்மையில் கூறியிருந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு பதக்கத்தை ஏலத்தில் விடுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் இந்தப் பதக்கம் இலங்கையின் சார்பில் வெற்றியீட்டப்பட்டது எனவும் எனவே பதக்கம் நாட்டுக்கு சொந்தமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதக்கத்தை சுசந்திகா ஏலத்தில் விற்றால் அதனை கொள்வனவு செய்ய விளையாட்டுத்துறை அமைச்சு தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.