Header Ads



பேய் விரண்டோடும் அளவுக்கு ராஜித்தவும், சம்பிக்கவும் பொய் சொல்கிறார்கள் - கோட்டாபய

ராஜித, சம்பிக்க நாட்டுக்குப் பணியாற்றத் தெரிந்தவர்கள் அல்லர். அவர்கள் பொய் காரர்கள் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று பிற்பகல் ஆஜராகியதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ரக்னா லங்கா நிறுவனத்துக்கு தனக்கு வேண்டியவர்களை நியமித்துத் தருமாறு எனக்கு கடிதம் அனுப்பியவர்கள் தான் இந்த அமைச்சர்களான ராஜிதவும், சம்பிக்கவும். இப்போது எங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் அனுப்பிய கடிதங்கள் இன்னும் என்னிடம் இருக்கின்றன. பொய் கூறித் திரியாமல், நாட்டுக்காக வேலை செய்து காட்டுமாறு நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். அவர்களைப் பற்றி சிறுபராயம் முதல் எனக்கு நன்கு தெரியும்.

நான் பாராளுமன்ற எம்.பி. யோ, அமைச்சரோ அல்ல. பேய் விரண்டோடும் அளவுக்கு பொய்களைக் கூறாமல் அவர்களது வேலையை ஒழுங்காக செய்யுமாறு நான் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறினார். 

5 comments:

  1. Ivargalaippatri nanraaga therinduma ivargalai
    ungaludan vaiththirundeergal AIYYA ?

    Gnanasaravaiyum nanraagave therinduthane
    vaiththirundeergal AIYYA ? Azeppadi ayya
    intha gnanam pattam pazavi ellaame
    pidungappatta pinnaala varuzu ? Ezukkaga
    ayya ippidi oruththana oruththan
    kuththikittu chaavureenga ? Izukku
    Wele Sudawe thevalayya !!

    ReplyDelete
  2. தற்போதைய நிலைமைகளை அவதானிக்கும்போது அழுத்கம சம்பவத்தின் சூத்திரதாரிகள் அரசாங்கத்தின் உள்ளேதான் இருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது .எமது முஸ்லீம் சமூகம் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை சரியாக இனம் காண வேண்டும் .

    ReplyDelete
  3. Well said Sir. ...salute you

    ReplyDelete
  4. ஒரு நல்ல கதை சொல்லியுள்ளார் போல. காலம் நிறைய கற்றுத் தந்துள்ளதோ!

    ReplyDelete

Powered by Blogger.