Header Ads



அரசின் மீது முஸ்லிம்கள், நம்பிக்கை இழந்துள்ளனர் - கபீர் ஹாஷிம் பகிரங்க பேச்சு

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் தாக்­கு­தல்­க­ளுக்கு காலம் கடந்தும் எவ்­வித நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கா­மையின் கார­ண­மாக நாம் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்­துள்ளோம். எனவே அர­சாங்கம் துரி­த­மாக இன­வா­தத்தை தூண்­டு­வோ­ருக்கு எதி­ராக காலம் தாழ்த்­தாது சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மேலும் இன­வாத தாக்­கு­தல்­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.

 இன­வாத தாக்­கு­தல்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும்  சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டு­வ­தற்கும் பொலிஸார் அதி­கா­ரத்தை பிர­யோ­கிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் தாக்­கு­தல்கள் தொடர்­பாக  வின­விய போதே அமைச்சர் Vi ­க்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இந்த நாட்டில் இன­வா­தத்தை தூண்­டு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. அர­சாங்கம் என்ற வகையில் நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம். அண்மை கால­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு தாக்­கு­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. பல வர்த்­தக நிலை­யங்­களும் தொழிற்­சா­லை­களும் பள்­ளி­வா­சல்­களும் தாக்­கப்­பட்டும் தீயிட்டு கொழுத்­தப்­பட்டும் உள்­ளன. 

எனவே இந்த விடயம் தொடர்­பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­விடம் பேசினோம். இதன்­பி­ர­காரம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டு­வ­தற்கு அர­சாங்கம் பூரண நட­வ­டிக்‍கை எடுக்கும் என்றும்  இதற்­கான பூரண அதி­கா­ரத்தை பொலி­ஸூக்கு வழங்­கி­யுள்­ள­தா­கவும் அமைச்சர் எம்­மிடம் குறிப்­பிட்டார்.

எனினும் இந்த விடயம் காலம் கடந்தும் நடந்­த­தாக தெரி­ய­வில்லை. எனவே பொலிஸார் சட்டம் ஒழுங்கை உரிய முறையில் பாது­காக்க வேண்டும். அதற்­கான பூரண அதி­காரம் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே சட்டம் ஒழுங்கை பாது­காப்­ப­தற்கு அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

முஸ்­லிம்கள் மீதான தொடர் தாக்­கு­தல்­க­ளுக்கு காலம் கடந்தும் நட­வ­டிக்கை எடுக்­கா­த­மையின் கார­ண­மாக அர­சாங்­கத்தின் மீது நாம் நம்­பிக்கை இழந்­துள்ளோம். நாட்டில் வாழும் முஸ்­லிம்­களும் அர­சாங்­கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். ஆகவே அரசாங்கம் தொடர்ந்து காலம் தாழ்த்தாமல் இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

10 comments:

  1. நிச்சயமாக நம்பிக்கை இழந்துவிட்டோம். அதன் எதிர்வினையை அடுத்த தேர்தலில் நிச்சயமாக பிரதிபலிப்போம்.

    ReplyDelete
  2. இந்த இக்கட்டான காலகட்டத்தில் இப்படி நாம்
    அதாவது 'சிறுபான்மை மக்கள்'
    சிந்தித்தால் என்ன..??

    ����������������

    இன,மத,மொழிப்பாகுபாடுகள் அற்ற
    கொள்கையை அடிப்படையாகக் கொண்ட
    இலங்கையின் ஓரங்கட்ட முடியாத ஒரு
    உன்னதமான ஒரே கொள்கையுடன்
    இயங்கும் அரசியல் சக்தியான
    'மக்கள் விடுதலை முன்னணி' பக்கம்
    நம்மவர்கள் அதாவது சிறுபான்மையினர்
    தம் பார்வையைச் செலுத்தினால் என்ன..??

    பேரீச்சம் பழ வரி முதல் அவ்வப்போது எமக்காக சிறுபான்மை மக்களுக்காக பாராளுமன்றத்தில்
    நாம் கோரிக்கை விடுக்காமலே
    குரல் கொடுக்கும் அவர்கள் நமக்கு நிச்சயம் உதவுவார்கள்..!

    'இலங்கையில் பிறந்த அனைவரும்
    சம உரிமையுடன்
    சம நீதியுடன் நடத்தப்பட வேண்டும்
    என்ற கொள்கையை
    அடிப்படையாகக் கொண்டு
    இயங்குபவர்கள்..!!'

    JVP எனும்
    மக்கள் விடுதலை முன்னணியுடன்
    பேச்சுவார்த்தைகள் நடாத்துவதன்
    மூலம், நம் சிறுபான்மை சமூகத்துக்கு
    விமோசனத்தையும், பாதுகாப்பையும்
    நிச்சயம் உறுதி செய்ய முடியும்..!!

    அதன் பிறகு இந்த நாட்டில்
    சிறுபான்மையினருக்கு எதிராக
    எந்தப் பிரச்சினையும் நடக்காது
    என்று நம்பலாம்.

    'அடம்பன் கொடியும்
    திரண்டால் மிடுக்கு' என்று
    சும்மாவா சொன்னார்கள்..!!

    சிந்திப்போமா..? செயல் படுவோமா..??

    " பூமியை வெல்ல
    ஆயுதம் எதற்கு..?
    பூப்பறிக்க
    கோடரி எதற்கு..?
    பொன்னோ பொருளோ
    'போர்க்களம்'
    எதற்கு..??
    'ஆசை' துறந்தால்'
    அகிலம்' உனக்கு "

    ஆம், சொகுசு வாழ்க்கையை
    விரும்பும் இந்த சாக்கடை
    சுய நல அரசியலை அப்படி
    இலேசாக நம்
    அரசியல்வாதிகள்
    விட்டுவிட மாட்டார்கள்.

    அப்படிப்பட்ட சுயநலமிகளை
    ஓரங்கட்டிவிட்டு மக்களாகிய
    நாம் அனவரும் ஒன்று சேர்ந்து
    சிந்தித்து சீக்கிரமே ஒரு நல்ல
    முடிவை எடுப்போம்..!

    ஒன்றை மட்டும் ஞாபகம்
    வைத்துக் கொள்ளுங்கள்..!

    இந்த மைத்திரியோ, ரனிலோ,
    மகிந்தயோ அல்லது
    அரபு ( முஸ்லிம்) நாடுகளோ
    நம்மைப் பாதுகாப்பார்கள்
    என்று மட்டும் நம்ப வேண்டாம்..!

    அவர்கள் அனைவரும்
    முஸ்லிம்களை அழிக்கக்
    கங்கணம் கட்டிக்
    கொண்டு இயங்கும்,
    இஸ்லாத்துக்கு எதிரான
    சக்திகளுடன் கை
    கோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    உலக அளவில்
    முஸ்லிம்களுக்கு அநியாயங்களும்,
    அட்டூழியங்களும்
    திட்டமிட்ட அடிப்படையில்
    அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன.

    இலங்கையும் விதிவிலக்கல்ல..!

    இவ்வளவும் நடப்பது,
    எம்மை சீண்டுவதற்கும்,
    அதன் மூலம்
    ஒரு பெரிய கலவரத்தை
    உண்டுபண்ணி
    எம்மையும் எமது
    பொருளாதாரத்தையும்
    அழிப்பதும்தான்
    (இந்த இனவாதிகளின்)
    குறிக்கோள்..!

    இதற்கு சியோனிஷ (யூத)
    சக்திகளின் பலமான ஆதரவுண்டு.
    நல்லாட்சியோ, நம் அரசியல்
    தலைமைகளோ இந்தச்
    சதித் திட்டங்களை நிறுத்த முடியாது.
    தலைக்கு மேலே வெள்ளம்
    போகிறது..!

    நாம் இன்னும் வேடிக்கை
    பார்த்துக் கொண்டிருந்தால்
    நாளொரு மேனி,
    பொழுதொரு வண்ணமாக
    எமது உடமைகள்
    அழிக்கப்படும்,
    ஏன் உயிர்களின்
    அழிவும் ஆரம்பமாகும்..!

    இன்று அங்கு,
    நாளை இங்கு
    மறுநாள் எங்கும்..!!

    "சுவர் இருந்தால்தான்
    சித்திரம் தீட்டலாம்"

    "சிந்தித்து அவசரமாக
    முடிவெடுக்கும்
    தருணம் இது"

    "வாழை மலர் போல
    பூமி முகம் பார்க்கும்
    'கோழைக் குணம்'
    மாற்று தோழா..!

    நாளை உயிர் போகும்,
    இன்று போனாலும்
    'கொள்கை நிறைவேற்று'
    தோழா..!!"

    சிந்திப்போம், இனியும்
    பார்த்துக் கொண்டிருக்காமல்
    உடனே அவர்களுடன் (JVP)
    பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம்.

    நமது இந்த முடிவு,
    இந்த நாட்டில் மட்டுமல்ல,
    உலக அளவில் மெச்சப்படும்-
    பாராட்டப்படும்,
    இலங்கை அரசியலில்
    மாபெரும் அரசியல்
    புரட்சியை ஏற்படுத்தும்..!

    ¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

    ReplyDelete
    Replies
    1. All are same recism.pks go back to1988 89 history of JVP .THEY OPPRESSED PEOPLE

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. 1988, 1989 காலப்பகுதியில் அவர்கள் நடப்பு அரசாங்கத்துடன் தமது போராட்டத்தை நடாத்தினார்கள்,
      1972 காலப்பகுதியில்
      அன்றைய ஶ்ரீமாவோ அரசாங்கத்துடன் ஆயுதப் போராட்டம் நடாத்தினார்கள். அவர்களின் போராட்டங்களை அந்தந்தக் கால அரசுகள் கொடூரமாக அடக்கியது தெரிந்ததே.
      அதுபோல, வட-கிழக்கில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து விடுதலைப்புலிகள் ஆயுதமேந்தினார்கள்,
      ஈற்றில் அழிக்கப்பட்டார்கள்.

      மக்கள் விடுதலை முன்னணி பெரும்பான்மை சமூகத்தையும், ஈழப்புலிகள் சிறுபான்மை
      தமிழ் சமூகத்தையும் பிரநிதித்துவப்படுத்தி தமது ஆயுதப் போராட்டத்தை நடாத்தினார்கள்.

      இருதரப்பும் தம் கொள்கைகளை மறந்து
      நீதி நியாயங்களை மறந்து
      மனித தர்மங்களை மறந்து ஆயுதங்களில் மட்டும் நம்பிக்கை வைத்ததன் மூலம் அழிவைச் சந்தித்ததே வரலாறு.

      ம.வி.மு தம் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, தம் தவறை உணர்ந்து ஜனநாயக அரசியல் பக்கம் வந்து தமது அரசியல் பயணத்தை மேற் கொண்டிருக்கிறார்கள்.
      1988, 1989 காலப்பகுதியில் தாம் விட்ட தவறை உணர்ந்துதான் இப்போது ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.
      மீண்டும் மீண்டும் பழைய குப்பையைக் கிண்ட வேண்டியதில்லை.

      JVP அரசியல் நீரோட்டத்துக்கு வந்த பின்பு அது
      இலங்கை அரசியலில்
      பலவித மாற்றங்களை
      ஏற்படுத்தி இருப்பதை
      யாரும் மறக்கவோ
      மறுக்கவோ முடியாது..!

      மஹிந்த ராஜபக்ஷ முதன் முதலாக ஜனாதிபதித் தேர்தலில் நின்ற போது, அவரை வெற்றி பெறச் செய்தது இந்த மக்கள் விடுதலை முன்னணி என்றால் அது மிகையாகாது..!

      அன்று மஹிந்த தோற்றிருந்தால், இன்று இந்த நாடு
      நவ காலனித்துவத்தின் கட்டுப்பாட்டில் சிக்கி சீரழிந்திருக்கும், அதன் மூலம் சிறுபான்மையோர் குறப்பாக இலங்கை முஸ்லிம்கள் பாரதூரமாகப் பாதிக்கப் பட்டிருப்பார்கள்.

      JVP இன் பிரசன்னம் அதை ஓரிரு தசாப்தங்களுக்குப் பின் தள்ளியுள்ளதே தவிர முற்றாக இல்லாமல் செய்யவில்லை.

      அது இப்போது சிறுபான்மை மக்களின் வாக்குகள் மூலம் அதிகாரத்துக்கு வந்துள்ள நல்லாட்சியின் மூலம் மீண்டும் அரங்கேற ஆரம்பித்துள்ளது.

      இப்போது நடந்து கொண்டிருப்பதல்லாம் அதுதான்..!

      மஹிந்த காலத்தில் யூதர்களுக்கென்று தூதரகம் இல்லை, ஆனால் இந்த நல்லாட்சியில் அது உண்டு.

      இனவாதிகளை இயக்கும் பின்புலமும் அதுவே.
      அதற்கெதிராக இந்த நல்லாட்சி எதுவும் செய்யாது, செய்ய முடியாதுள்ளது..!

      இன்றைய பிரதமர்
      சியோனிசவாதிகளின் செல்லப்பிள்ளை.
      GSP+ ஐக் கொடுத்து
      அவர்கள் தமது வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது நம்மவர்க்கு
      இப்போதைக்குப் புரியாது.
      அது புரியும் போது எவ்வளவோ நடந்து முடிந்திருக்கும்..!!

      நாம் சிந்தித்து ஒரு
      முடிவுக்கு வர
      இனியும் தாமதித்தால் விளைவுகள்
      மிகவும் பயங்கரமானதாகவே இருக்கும்..!

      படைத்தவன் அல்லாஹ் ஒருவன்தான் நம்மைக்
      காக்க வேண்டும்.!!
      இந்த நல்லாட்சி அல்ல
      என்பதைக் கூறிவைக்கின்றேன்..!!!

      ++••++•••++•••++•••++••+

      Delete
    4. I agree with jubaideen 100%

      Delete
  3. Beside the previous government is most better than this government. If there will be a vote ele.. people will show theor reaction...insha allah

    ReplyDelete
  4. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
    (அல்குர்ஆன் : 2:155)

    ReplyDelete
  5. JRJ economic projects were sabotaged by regional
    forces,using LTTE and Mahinda defeated LTTE of
    Northern Tamils and proved he was not happy about
    Muslims community living in the country without
    enough harm . So , he loved if somebody unleashed
    terror against Muslims copying Bush tactics which
    has not ended yet . The only difference in the
    approach between Bush and Mahinda was , Bush went
    after past , present and future dangers to the US
    where as Mahinda just created an enmity and a
    terror group for his desire of being a false
    nationalist against all minorities. Sirisena who
    was trained in that camp all his life and Ranil
    who is scared of being called anti-Buddhist,are
    both willing to let it pass without any ha hoo !
    BUT MUSLIMS HAVE ALREADY TAKEN THEIR DECISION
    IN ANY FUTURE ELECTIONS . BUT REMEMBER NOT TO
    GET MISLED AGAIN. MY3 IS DEAF ! RANIL BLIND
    AND MAHINDA DUMB ! THEIR FOLLOWERS TOO. THEY
    HAVE TAUGHT THEIR NEXT IN LINE LEADERS HOW TO
    IGNORE OR CREATE TENSION AMONG COMMUNITIES TO
    THEIR ADVANTAGE AND DETRIMENTAL TO THE
    VICTIMS.

    ReplyDelete
  6. Thank you for you understanding.
    Still no responses from others.

    ReplyDelete

Powered by Blogger.