Header Ads



முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழுவொன்றை நியமிக்குக - ஜனாதிபதியிடம் ரிஸ்வி முப்தி

-விடிவெள்ளி-

பொது­ப­ல­சேனா அமைப்பு முஸ்­லிம்கள் மீது சுமத்தும் குற்­றச்­சாட்­டுகள், சந்­தே­கங்கள் என்­ப­வற்றை ஆராய்ந்து தீர்­வு­களை சிபார்சு செய்­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுயா­தீன குழுவொன்­றினை நிய­மிக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி வேண்­டுகோள் விடுத்­துள்ளார். 

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தங்­க­ளது முறைப்­பா­டு­க­ளையும் சந்­தே­கங்­க­ளையும் பேச்­சு­வார்த்­தைகள் மூலம் தீர்த்­துக்­கொள்ளத் தயார் என்று பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சா­ர­தேரர் அழைப்பு விடுத்­தி­ருக்கும் நிலையில் அது தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இவ்­வாறு கூறினார்.  அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘

தற்­போது நிலவும் பிரச்­சி­னைகள் தொடர்பில் முஸ்லிம் சமூகம் பேச்­சு­வார்த்தை நடத்திக் கொண்­டி­ருப்­பதில் பயன் ஏதும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. பொது­ப­ல­சேனா அமைப்பு முஸ்­லிம்கள் மீதான தமது குற்­றச்­சாட்­டுகள், சந்­தே­கங்கள் என்­ப­வற்றை ஜனா­தி­ப­தி­யிடம் முறை­யி­டட்டும். ஜனா­தி­பதி இதற்­கென விஷேட சுயா­தீன கமிட்டி ஒன்­றினை நிய­மித்து அது தொடர்பில் ஆராய்ந்­து­ஒரு தீர்க்­க­மான தீர்­மா­னத்தை எடுக்­கட்டும். 

அர­சாங்­கமும் ஜனா­தி­ப­தியும் இந்­நாட்டின் பெரும்­பான்மை மக்­க­ளுக்கும் சிறு­பான்மை மக்­க­ளுக்கும் அநீ­திகள் ஏற்­ப­டு­வதை ஒரு­போதும் விரும்­ப­மாட்­டார்கள். எனவே ஜனா­தி­பதி நிய­மிக்கும் கமிட்­டியின் தீர்­மா­னத்தை அர­சாங்கம் சட்ட ரீதி­யாக அமுல் நடத்­தட்டும். அதனை முஸ்லிம் சமூகம் ஏற்­றுக்­கொள்ளத் தயா­ரா­கவே உள்­ளது. 

கடந்த காலங்­களில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை கலந்து கொண்ட ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்­பு­க­ளிலும், சர்­வ­மத தலை­வர்கள் கலந்து கொண்ட கலந்­து­ரை­யா­டல்­க­ளிலும் நாம் இவ்­வி­ட­யத்தை தெளி­வாக எடுத்து விளக்­கி­யி­ருக்­கிறோம்.

பேச்­சு­வார்த்­தைகள் மூலம் இணக்கம் காணு­வதை விட ஜனா­தி­ப­தி­யூ­டாக சட்­ட­ரீ­தி­யாக பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு பெற்றுக் கொள்­வதே நம்மை பயக்கும் என உலமா சபை கரு­து­கி­றது.

எனவே, பொது­ப­ல­சேனா அமைப்பும் ஏனைய அமைப்­பு­களும் முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளும் சந்தேகங்களும் ஜனாதிபதியிடமே முன்வைக்கப்படவேண்டும். பிரச்சினைகளுக்கு நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதியே தீர்வுகள் பெற்றுத்தர வேண்டும் என்றார்.    

No comments

Powered by Blogger.