Header Ads



தாக்கல் செய்த மனுவை, திரும்பபெற்ற ஞானசாரர்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை திரும்பப் பெற்றுள்ளார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பொலிஸ் பிரிவு தன்னை ஒருதலைப்பட்சமாக கைது செய்ய தயாராகி வருவதாகவும், அவ்வாறு கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த உத்தரவிடுமாறும் கோரி ஞானசார தேரர் தனது சட்டத்தரணி ஊடாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த ஞானசார தேரர் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதனையடுத்து மூன்று வழக்குகளில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.