இவ்வாறான உடை அணிந்ததற்காக, மன்னிப்பு கோருகிறேன் - சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த வார இறுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாபலகம மத்திய மகா வித்தியாலயத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு சென்றவர், “நான் முதலாவதாக மன்னிப்பு கோருகின்றேன். நிகழ்வுகளுக்கு செல்லும் போது நான் இவ்வாறான உடை அணிந்து செல்வதில்லை.
சேறு நிறைந்திருக்கும் என நான் நினைத்தேன். நான் சில நாட்களுக்கு முன்னர் இரத்தினபுரிக்கு சென்றிருந்தேன். அங்கு சேற்றுக்குள் நடக்கும் நிலை ஏற்பட்டமையினால் சப்பாத்து அணிந்து தான் செல்ல நேரிட்டது. அதன் காரணமாக இவ்வாறான உடையில் வந்தேன் என சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment