கோதபாய ராஜபக்ஸ, பொதுபல சேனாவை உருவாக்குவதற்கு உதவி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவுவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் நடவடிக்கைகளினால் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமயத்தவர்கள் பெருவாரியானவர்களின் ஆதரவினை இழக்க நேரிட்டதாக வெர் தெரிவித்துள்ளார்.
வழமையாக 40 முதல் 45 வீதமான கத்தோலிக்கர்கள் சுதந்திரக் கட்சிக்கு வாக்களிப்பது வழமை என்ற போதிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இந்த எண்ணிக்கை 25 வீதமாக அது வீழ்ச்சியடைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். 15 வீதமான முஸ்லிம்கள் வாக்களித்துள்ள போதிலும் அந்த தொகை 2 வீதமாக வீழ்ச்சியடைந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதில் முக்கிய பங்களிப்பினை வழங்கிய கோதபாய ராஜபக்ஸ மறுபுறத்தில் பொதுபல சேனாவை உருவாக்குவதற்கு உதவியதாகவும் அதுவே இன்று குரோத உணர்வுகள் தூண்டப்படுவதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
same think will happen to you also
ReplyDeleteAthu onakku ippawa theriyum?
ReplyDelete