Header Ads



கோச்சியில் ஒரு கோரக் கொலை


கோச்சில மகன் போனான்
கொண்டாட உடுப்பெடுக்க
போச்சி உசிரெண்டு
புலம்புவது கேட்கிறதா?

ஓதிப் படிச்ச புள்ள
ஓடிஆடித் திரிந்த புள்ள
சாதி வெறி பிடிச்ச இந்த
சதிக் கூட்டம் கொண்ணுப்புட்டு.

மாட்டின் பெயராலே
மனுசனக் கொல்லுறியா?
ஊட்டுல கேட்டுப் பாரு
உன்னப் பெத்தா மாட்டுக்கா?

குடிகார நாய்க் கூட்டம்
குதறி எறிவதற்கு
அடிப்படைக் காரணம்
ஆட்சி செய்யும் வெறியரே

உடுப்பெடுக்க போன புள்ள
ஊட்டுக்கு வருவாண்ணு
அடுப்படியில் காத்திருந்தா
அடிச்சு கொன்னு போட்டியடா

என்ன பாவம் செஞ்சாண்ணு
இந்தப் புள்ள கொன்னீங்க
சின்ன மகன் இறப்பால
சிந்தும் கண்ணீர் நெருப்பாகும்

நெருப்பொரு நாள் பரவும்
நீசர்களை அழிக்கும்
கருப்பாடு ஒழிந்து போகும்
காத்திருப்போம் அதற்காக..

Mohamed Nizous


3 comments:

  1. What a tragic death ! Moved to tears .How can we celebrate Eid ?

    ReplyDelete
  2. Inhuman n rude act. The mill of the God grinds slow but sure.

    ReplyDelete

Powered by Blogger.