Header Ads



சிறந்த சூழல் ஒன்று, உருவாக்கப்பட்டுள்ளது - ஞானசாரர்

நாட்டை தீ வைக்க தமக்கு அவசியமில்லை என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

நாம் கடந்த காலங்களில் வெளிப்படுத்திய பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு சிறந்த மேடையொன்றை அஸ்கிரிய மாநாயக்க தேரர்கள் ஏற்படுத்திக் கொடுத்தமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.

நாட்டை தீ வைக்க எமக்கு அவசியமில்லை. பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பாதையொன்றை உருவாக்கும் நடவடிக்கையையே நாம் இதுவரை மேற்கொண்டு வந்தோம்.

அதற்கு இன்று சிறந்த சூழல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் கூறியுள்ளார்.

8 comments:

  1. Finally wisdom prevailed over emotion...

    ReplyDelete
  2. இன்றும் சரிஅன்றும் சரி இலங்கையில் என்னதான் நடந்தது நீதான் குழப்பத்தை போட்டா.
    நீதான் ஓடி ஒழிஞ்சா நீதான் சரன் அடைந்ததாய் இப்ப நீதான் நல்ல சிறந்த சூழல் என்கிறாய்...

    ReplyDelete
  3. ஞானசாரவின் இந்த அறிக்கை அந்தோணிக்கும் குமரனுக்கும் சந்திரபோஸுக்கும் கடுப்பை ஏற்படுத்தியிருக்கும்.
    உங்களது சூழ்சிகளையெல்லாம் மிகைத்த சூழ்சிக்காரன், அனைத்தையும் ஆட்சி செய்பவன் அல்லாஹ் ஒருவன் என நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள். மார்க்கத்தை திரிவுபடுத்தியவர்களோ அவனுக்கு உருவம் அமைத்தவர்களோ நாங்களல்ல.

    ReplyDelete
    Replies
    1. Mohamed lafir
      சிறு பிள்ளை போன்று பேசுகிறீர்.இதில் சந்தோசப்படவோ வருத்தப்படவோ ஒன்றுமில்லை.
      ஞாசாரர் இனவாதி என்று சிங்கள மக்கள் நம்பினர்.இப்போது அஸ்கிரிய பீடமும் சிங்களமக்களும் அவரை தேசியவீரனாக பார்கின்றனர்.

      Delete
  4. Mr. Kumaran, அஸ்கிரிய பீடங்களும் தமது இனவாத முகத்தை வெளிக்காட்டியுள்ளது.உங்களுக்கு சந்தோசமா?

    ReplyDelete
    Replies
    1. முன்னைய அரசில் தக்குதல் நடைபெற்றது ஆனால் இப்போது போன்று ஞானசார ஓடீ ஒளியவில்லை அப்படி என்றால் என்அர்த்தம் அரசு தன்னை கைது செய்யும் என ஞானசார ஓடினார்.ஓடியவரை கொண்டுவா கொண்டுவா எண்டு அடம்பிடிச்சது யாரு?அவர்கள் தானே சந்தோசப்படனும்.

      Delete
  5. Kumar Kumaran

    Alitalia kadaththiyavanum VEERAN enru potrappatta
    naadu namma naadu nanba .

    ReplyDelete

Powered by Blogger.