Header Ads



கவிக்கோ அப்துல் ரஹ்மானின், ஜனாஸா நல்லடக்கத்தில் ஹக்கீமும் பங்கேற்பு (படங்கள்)


சென்னையில் சனிக்கிழமை (03) பிற்பகல் நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரஹ்மானின் ஜனாஸா நல்லடக்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார். அவரது ஜனாஸா தொழுகை திருவான்மியூர் நூர் மஸ்ஜீதில் நடைபெற்ற பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு அமைச்சர் ஹக்கீம் இரங்கலுரையும் ஆற்றினார்.

முன்னதாக, அமைச்சர் ஹக்கீம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பனையூரிலுள்ள கவிக்கோவின் இல்லத்திற்கு சென்று கவிக்கோவின் ஜனாஸாவை பார்வையிட்டு, அவரது மகளுக்கும், மருமகனுக்கும் அனுதாபம் தெரிவித்ததோடு, ஆறதலும் கூறினார்.


No comments

Powered by Blogger.