Header Ads



பொது பலசேனாக்கு தொடர்ந்து, பாலூட்டும் கோத்தபாய

பொதுபலசேனா அமைப்புக்கு அன்று பாலூட்டி வளர்த்த கோத்தபாய ராஜபக்ஷவே இன்றும் அந்த அமைப்புக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், இனவாத, மதவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் குழுக்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பொதுபலசேனா அமைப்புக்கு அன்று பாதுகாப்பு வழங்கி அந்த அமைப்பை வளர்த்தெடுத்தவர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷதான். இன்று அந்த அமைப்பு இனவாத, மதவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதன் பின்னணியிலும் அவர்தான் இருக்கின்றார் என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.