Header Ads



இனவாதிகளை பாதுகாக்கிறார் ஜனா­தி­ப­தி - விக்­ர­ம­பாகு கடும் தாக்கு


-எம்.ஆர்.எம்.வஸீம்-

நாட்டில் இன,மத­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக பொலிஸார் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என பிர­தமர் தெரி­வித்­தி­ருக்­கின்­ற­போதும் இது­தொ­டர்­பாக ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கைகள் திருப்­தி­ய­ளிப்­ப­தாக இல்லை.

அவர் இன­வா­தத்தை பரப்­பு­ப­வர்­களை பாது­காத்து வரு­கின்றார் என நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன தெரி­வித்தார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

பொது­ப­ல­சேனா அமைப்­பைச்­சேர்ந்த ஞான­சா­ர­தேரர் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள தொடர்ந்து மேற்­கொண்டு வந்தார். அதனால் அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுத்து வந்தோம். அத்­துடன் பொலிஸில் முறைப்­பாடு தெரி­வித்து அவரை கைது­செய்­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம்.

ஆனால் தற்­போது இன­வா­திகள் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்த ஆரம்­பித்­துள்­ளனர். இந்த காலப்­ப­கு­தியில் 347 கிறிஸ்­தவ ஆல­யங்கள் தாக்­கப்­பட்­டுள்­ள­தாக எங்­லிகன் பிஷப் மேற்­றி­ரா­ணியார் எங்­க­ளிடம் தெரி­வித்­தி­ருந்தார். பாரிய தாக்­கு­தல்கள் அல்­லா­விட்­டாலும் திட்­ட­மிட்ட முறையில் நாடு­பூ­ரா­கவும் இடம்­பெற்­றுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார். இவ்­வா­றான சம்­ப­வங்கள் மூலம் நாட்டின் எதிர்­கா­லத்­துக்கே பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­விடும்.

அத்­துடன் இன,மத­வாத நட­வ­டிக்­கை­களை தூண்­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பொலி­ஸா­ருக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார்.

என்­றாலும் இன­வாத செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்கு ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்கை எங்­க­ளுக்கு திருப்­தி­ய­ளிப்­ப­தாக இல்லை. இன­வாதம் தொடர்­பான அவரின் எண்ணம் வளைந்து செல்­வ­துபோல் இருக்­கின்­றது. இன­வாதம், மத­வா­தத்தை பரப்­ப­வேண்டாம் என அவர் தெரி­விக்­கின்ற நிலையில், இன,மத­வா­தத்தை பரப்­பு­ப­வர்­களை பாது­காத்து வரு­கின்றார். இன­வா­தி­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கும்­போது அதனை தடுத்து வரு­கின்றார். 

அத்­துடன் இன­வாத்தை பரப்­பு­ப­வர்­க­ளுக்கு அர­சியல் பத­வி­களை வழங்­கு­கிறார்.மொன­ரா­கலை பிர­தே­சத்தில் இன,மத­வா­தத்தை துண்­டக்­கூ­டிய ஒரு­வ­ருக்கே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தொகுதி அமைப்­பாளர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது.  அந்த பிர­தே­சங்­களில் இன­வாத சுவ­ரொட்­டிகள் ஒட்­டு­வ­தற்கு அவர் அனு­ம­தித்து வரு­கின்றார்.

அந்த பிர­தே­சத்­தைச்­சேர்ந்த வட்­ட­ரக்க விஜித்த தேர­ருக்கும் அழுத்தம் விடுக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் ஜனா­தி­ப­தியின் அனு­ம­தி­யு­டனா இவை நடை­பெ­று­கின்­றன என்­பதை அறிந்­து­கொள்ள ஜனா­தி­ப­தியை சந்திக்க வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நாட்டில் இனவாதம் மதவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து வரும் ஜனாதிபதி இனவாதத்தை தூண்டுபவர்களை பாதுகாத்து வருவதை அனுமதிக்க முடியாது.

அத்துடன் ஜனாதிபதி தனது கட்சியை பாதுகாப்பதற்காக இனவாதிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது என்றார்.

4 comments:

  1. ஜனாதிபதியும் பொலிஸ் மா அதிபரும் உடனடியாக பதவி விலக வேண்டும்.ஒரு நாட்டை ஆளும் சக்தி தலைவருக்கு இல்லாவிட்டால் ஏன் அவர் தொடர்ந்து அந்த பதவியில் இருக்க வேண்டும்.
    ஜனாதிபதி ஒருவகையில் ஏதோ மனநோயாளி போல தென்படுகின்றன யாரு சரி அவருக்கு காய் கொடுத்தால் வேற என்னமோ யோசித்துக்கிட்டு இருக்கிறார், சில நேரம் கண்டும் காணாமல் போல இருக்கிறார் ஒழுங்கா முகம் பார்த்து வெளிநாட்டு தூதுவர்களை பேசுவதில்லை,சிறுபான்மை மக்களின் பிரச்சினை ஒன்றும் தெரியாதாம் சில நேரம் பத்திரிகை மூலமாக மட்டுமாம் விஷயம் தனக்கு தெரியுமாம் அப்படியான ஜனாதிபதி இனிமேல் நாட்டுக்கு தேவையில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஞானசார கைது செய்யப்பட்டாலும் சிங்களமக்கள் கர்தால் செய்து அவரை மீட்டெடுக்க முடியும்.முஸ்லீம்களின் நீயாயப்படி! !😄

      Delete
  2. NAMMA NAATLA PADAVI RAAJINAAMA??
    SUMMA PONGA BROTHER
    IVANGA PADAVIKKAHA INDA NAATAYE WIPPAANUNGA.

    ReplyDelete
  3. Majority Muslims are UNP voters and the party is
    duty bound to protect its vote bank.UNP can not
    wash off its hands by passing the ball to Muslim
    parties. All these stinking political leaders of
    major parties are doing politics with an issue
    so dangerous the moment Muslims feel " we had it
    enough." Almost all Buddhist leaders are playing
    in favour of racist acts of criminal thugs who
    have borrowed the helmet of Buddhism. The leaders
    who are able to wait for a bigger picture know
    very well the consequence. THE BALL IS ALREADY IN
    MUSLIM'S COURT.RANIL AND MY3 ARE DOING UMPIRES .
    MUSLIMS MUST DECIDE TO PLAY OR LEAVE THE COURT .
    A BALL IS SERVED TO BE RETURNED AND NOT TO KEEP
    LOOKING AT .

    ReplyDelete

Powered by Blogger.