Header Ads



அழகுக்கலை நிலைய யுவதி கழுத்தறுத்து கொலை, கத்தியுடன் காதலன் பொலிஸில் சரண்

கொஹு­வலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கெஸ்­பேவ வீதியின் நுகே­கொட – சூரி­ய­வெவ மாவத்­தையின் அருகில் உள்ள விளை­யாட்டு மைதா­னத்தை அண்­மித்த பகு­தியில் பெண் ஒருவர் கழுத்­த­றுத்து கொலை  செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் அவ­ரது சடலம்  மீட்­கப்­பட்­டுள்­ளது. 

நேற்று முன்தினம் இரவு 8.00 மணி­ய­ளவில் 119 அவ­சர அழைப்பு இலக்கம் ஊடாக பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வ­லுக்கு அமை­வா­கவே இந்த சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது.

கொலை செய்­யப்­பட்ட பெண் 25 வய­தான மத்­து­கம பகு­தி­யைச் சேர்ந்த பிரி­யங்கா சங்­கல்­பனீ குண­சிங்க எனும் அழகுக் கலை நிலையம் ஒன்றில் சேவை­யாற்­று­பவர் என பொலிஸார் தெரி­வித்­தனர்.

காதல் பிரச்­சினை கார­ண­மாக இந்தக் கொலை இடம்பெற்­றுள்­ள­துடன் கொலை செய்­யப்­பட்ட பெண்ணின் காதலன் என நம்­பப்­படும் இளைஞன் கொலைக்கு பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் கத்­தி­யுடன் பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்த நிலையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந் நிலையில் சந்­தேக நபர் பொலி­ஸா­ருக்கு ஒப்­புதல் வாக்கு மூலம் ஒன்­றினை வழங்­கி­யுள்ள நிலையில் மேல­திக விசா­ர­ணை­களை கொஹு­வளை பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ளனர்.

'கொலை செய்­யபட்ட பெண் தனது காதலி எனவும்  அவரை மோட்டார் சைக்­கிளில் ஏற்­றிக்­கொண்டு பழைய கெஸ்­பேவ வீதியில் மைதானம் அருகில் சென்­ற­தா­கவும் அங்கு அவ­ருடன் ஏற்­பட்ட வாய்த்­தர்க்­கத்­தினால் அவரை கழுத்­த­றுத்து கொலை  செய்­த­தா­கவும் சந்­தேக நபர் வாக்கு மூலம் அளித்­துள்ளார்.

தமது காத­லுக்கு இடையே மற்­றொரு நபரின் காதல் விவ­கா­ரமும் தொடர்­பு­பட்­டதால் இந்த வாய்த்­தர்க்கம் ஏர்­பட்­ட­தாக சந்­தேக நபர் வாக்கு மூலம் அளித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண் ணின் தலை பகு­தியை அண்­மித்து மட்டும் 12 வெட்டுக் காயங்­க­ளையும் உடல் முழுதும் 20 வெட்டுக் காயங்கள் வரை காணப்­ப­டு­வ­தாக விசா­ரணை அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். 

சடலம் மீட்­கப்பட்ட இரவில் ஸ்தலத்­துக்கு பொலிஸார் விசா­ர­ணைக்­காக சென்­றி­ருந்த போது இரத்தம் தோய்ந்து கத்­தி­யுடன் சந்­தேக நபர் பொலிஸில் சர­ண­டைந்ததைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று கங்கொடவில நீதி மன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

(எம்.எப்.எம்.பஸீர்)

1 comment:

  1. என்னப்பா இந்த சின்ன நாட்டில நடக்குது .கண்டத்துக்கு பிடிச்சதுக்கு எல்லாம் கொலைலே தான் முடிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.