Header Ads



ஞான‌சார‌ விவ‌கார‌ம், முஸ்லிம்களுக்குச் சொல்லும் பாட‌ங்க‌ள்.


1. ஞான‌ சார‌ த‌னிம‌னித‌ர் அல்ல‌. அவ‌ர் பின்னால் அர‌சிய‌ல் அதிகார‌ம் உள்ள‌து.

2. பௌத்த‌ ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ள் அர‌சிய‌ல் செய்யும் போது உல‌மாக்க‌ள் அர‌சிய‌லை துற‌ந்து இருக்க‌ முடியாது.

3. ஞான‌சார‌ ஒரு ச‌ம‌ய‌ த‌லைவ‌ர் என்ப‌த‌னாலேயே அவ‌ரை கைது செய்வ‌தில் த‌டை ஏற்ப‌ட்டுள்ள‌தாக பொலிஸ் சொல்கிற‌து. இதே விட‌ய‌ம் ஏனைய‌ ச‌மூக‌ ச‌ம‌ய‌ த‌‌லைவ‌ர்க‌ள்  விட‌ய‌த்திலும் க‌டைப்பிடிக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என‌ பாராளும‌ன்ற‌த்தில் பேச‌ப்ப‌ட‌ வேண்டும்.

4. ஞான‌சார‌ குற்ற‌வாளியாக‌ இருந்தும் அவ‌ர் ச‌ம‌ய‌ த‌லைவ‌ர் என்ப‌தால் பெரும்பாலான‌ ம‌க்க‌ள் அவ‌ர் சார்பாக‌ ந‌ட‌ந்து கொண்ட‌ன‌ர். இதே போன்று ஒரு மௌல‌வி ச‌மூக‌ விட‌ய‌த்தில் போராடும் போது அவ‌ரை பொலிஸ் குற்ற‌வாளியாக‌ க‌ண்டாலும் ச‌மூக‌ம் அவ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ இருக்க‌ வேண்டும்.

5. முஸ்லிம் ம‌த‌ த‌லைவ‌ர்க‌ளுக்கான‌ சீருடை ச‌ட்ட‌மாக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

6. எதிர் கால‌த்தில் உல‌மாக்க‌ள் பாராளும‌ன்ற‌த்தில் இருக்க‌ வேண்டும். கார‌ண‌ம் ஒரு பௌத்த‌ ச‌ம‌ய‌ த‌லைவ‌ரின் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை இன்னொரு ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர் பேசுவ‌தையே சிங்க‌ள‌ ச‌மூக‌ம் அனும‌திக்கிற‌து.

7. உல‌மாக்க‌ள் த‌லைமையிலான‌ அர‌சிய‌ல் க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்துவ‌து கால‌த்தின் தேவையாகியுள்ள‌து.

8. அர‌சிய‌ல் விடுத‌லை போராட்ட‌த்தில் ஆயிர‌ம் பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌தை விட‌ ஒரு ஆலிம் கொல்ல‌ப்ப‌டுவ‌து பாரிய‌ அதிர்வை கொடுக்கும். அத‌‌ற்கேற்றாற்போல் உல‌மா தியாகிக‌ள் உருவாக‌ ச‌மூக‌ம் முய‌ற்சிக்க‌ வேண்டும். அப்ப‌டி முன்வ‌ருப‌வ‌ர்க‌ளின் தியாக‌த்தின் பின்ன‌ரான‌ அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்தின‌ரின் வாழ்க்கைக்கு உத‌வும் வ‌கையில் முஸ்லிம் இய‌க்க‌ங்க‌ள் நிதி உத‌வி செய்ய‌ வேண்டும்.

9. அர‌சுக‌ளை உருவாக்குத‌ல், மாற்றுத‌ல் போன்ற‌ விட‌ய‌ங்க‌ளில் ச‌மூக‌ம் முந்திரிக்கொட்டையாக‌ செய‌ற்ப‌டாம‌ல் உல‌மாக்க‌ளின் த‌னித்துவ‌மான‌ அர‌சிய‌ல் வ‌ழி காட்ட‌லை பெற‌ வேண்டும்.

10. ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ளை முற்ப‌டுத்திய‌ அர‌சிய‌ல் வேலைத்திட்ட‌ங்க‌ள் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

11. அர‌சிய‌லில் உள்ள‌ உல‌மாக்க‌ளை முன் வைத்து அவ‌ர்க‌ள் மூல‌ம் ச‌ம்பிக்க‌, ம‌ற்றும் ஞான‌சார‌வின் முஸ்லிம் விரோத‌ க‌ருத்துக்க‌ளுக்கான‌ ப‌தில் க‌ருத்துக்க‌ளுக்கான‌ ஊட‌க மாநாடுக‌ள் ந‌ட‌த்துவ‌த‌ற்கு ச‌மூக‌ம் உத‌வ‌ வேண்டும்.

இவை இன்றைய‌ அவ‌சிய‌ தேவையாகும். ஏதோ வாசித்தோம் போனோம் என்றில்லாம‌ல் ஒவ்வொரு த‌னி ம‌னித‌னும் இவ‌ற்றுக்காய் த‌ன்னால் என்ன‌ செய்ய‌ முடியும் என‌ சிந்தித்தால் முய‌ற்சி செய்தால் நிச்ச‌ய‌ம் இறைவ‌ன் உத‌வி செய்வான்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி
உல‌மா க‌ட்சி

10 comments:

  1. உலமாக்கள் அரசியலுக்கு வருவது என்பதை விட முஸ்லிம்களுக்கு ஒரு கட்சி மட்டும் இருக்கவேண்டும். அது உலமா சபை யினால் வழிப்படுத்தப்பட வேண்டும்

    ReplyDelete
  2. அத்தோடு ஙானசார பர்மாவுக்கும் ஜபனுக்கும் போவதைப் போல் உலமாக்கள் சவூதிக்கும் இந்தோநேசியாவுக்கும் போக வேண்டும். அவனுக்கு டிபெfன்டர் கொடுத்திருப்பதால் உலமாக்களுக்கு ஆர்மி ட்ரக் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. சிரிப்பு வருது மீண்டும் மீண்டும் வருது. நோன்பு அதனால அடக்கிட்டம்.

    ReplyDelete
  4. yes agreed.ellam senthu mahindaku support pannuvom.neega oru mayurum pudanga vendam. allah nammai padukapan

    ReplyDelete
  5. ஞானப் பறயன் பேசுவதைப் போன்று மௌலவி பேச முடியுமா அவனைப்போல் நபேச இஸ்லாம் அனுமதிக்குமா?நீங்கள் குற்றம் செய்வீர்கள் உங்களுக்கு பின்னால் காப்பாற்ற சமூகம் தேவையோ,,ஒரு நாளைக்கு நல்லா பேசுவிங்க இன்னொரு நாளைக்கு சும்மா உழவிங்க அந்த நாகூர் ஹனிபா இஸ்லாமிய கீதம் என்ற போர்வை உளறுவார் ஒருநாள் அல்லாஹ்விடம் கையேந்தச் சொல்வார் இன்னொரு நாளைக்கு கடற்கரை அவுலியாடம் கேட்கச் சொல்வார் அதுபோலவே உங்களின்தாளமும் மேளமும் அமைந்து வருகிறது

    ReplyDelete
  6. How to decide the dress for our moulavis ?
    Thowheed red
    Thableq white
    Jamath islami green
    Jamaathul muslimin yellow
    Thowheed group 2 . Blue
    Rauff moulavi group . Pink
    Devetagaha group . Light green
    Makkathar vaappa ..dirty white
    Thangal group .black
    3 wogthu group .. kaavi
    Parakadeniya group .. Burge color
    Kanthoori parties .. light rose


    Can we decide and cone to a conclusion for the dress ..

    Kilingithu. ...

    ReplyDelete
  7. Shabaash Br. Haaji Muhammad....

    ReplyDelete
  8. அரசியலிலும் கோமாளி
    மார்க்க விடயங்களிலும் கோமாளி

    ReplyDelete
  9. eppoludhum ellorayume kuraikoorittiriyum nam samoogatthin oru sila koottam... vetkam kettavargal...
    ungalukku ulai vaikka neengale podhumada... maatrumadha sagoodharargal thaevayillai...

    ReplyDelete

Powered by Blogger.