Header Ads



இனவாத குழுக்கள் தொடர்பில், பதற்றமடையத் தேவையில்லை - எஸ்.பி.

இனவாத குழுக்கள் தொடர்பில் அரசாங்கம் பதற்றமடையத் தேவையில்லை என சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி போகம்பரையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியொன்றில் இன்று பங்கேற்ற போது இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இனவாத தரப்புக்கள் தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை.

இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொலிஸாரும் படையினரும் இருக்கின்றார்கள்.

அதனால் அரசாங்கம் இனவாத தரப்புக்களை கண்டு பீதியடையத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பரவா இல்லையே வாயிலிருந்து சற்று நல்ல பேச்சும் வறுகின்றதே.

    ReplyDelete

Powered by Blogger.